Pages

Banner 468

Subscribe
Sunday, January 31, 2010

கோவையில் தீண்டாமைக்கு துணைபோன பெரியாரும், பிள்ளையாரும்

0 comments
 










நாகரிக வாழ்விற்கு நான்கு சுவர்கள் அவசியம், ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து வைப்பதற்க்கு தீண்டாமை சுவர்கள்கள் அவசியமா?

உத்திரபுரத்தை அடுத்து தற்போது கோவையிலும் தீண்டாமை சுவர் எழுப்பி தலித் மக்களை நடமாட விடாமல் கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள‌தை தற்போது தற்காலிகமாக உடைத்தெறிந்திருக்கிறது அரசு.

கோவை 10வது வார்டில் உள்ள பெரியார் நகரில் 58 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன, இவர்கள் கலணிக்கு அடுத்துள்ள பிரதான காமராஜர் சாலைக்கு செல்ல முடியாவன்னம், காலணியையும் காமராஜர் சாலையும் இனைக்கும் ஜீவா சாலையின் குறுக்கே 30 அடி நீலத்தில் சாதி இந்துக்களால் 1990ல் கட்டப்பட்டதுதான் இந்த பெரியார் நகர் தீண்டாமை சுவர்.

பெரியார் நகரில் வசிக்கும் தலித் குடும்பங்ககுக்கு 1989ல் அரசு வீட்டுமனை கொடுத்தது, இன் நகர் துவங்கும் இடத்தில் பெரும்பாலும் சாதி இந்துக்கள்தான் வசித்துவருகிறார்கள், ஆகையால் 1990ல் காலணி துவங்கும் இடத்தை மறைக்கும் விதமாக ஜீவா சாலையின் குறுக்கே ஓர் வினாயகர் சிலையை வைத்து சிறிய குடிசை எழுப்பினார்கள், பின் அதன் பின்புறம் 30 அடி நீலத்திற்க்கு சுவர் எழுப்பிவிட்டார்கள், ஆக சாதி இந்துக்கள் தெருவில் இருந்து பார்த்தால் காலணி தெரியது, அதே வேலையில் காலணி மக்களும் ஜீவா சாலையை கடந்து காமராஜர் சாலையை அடைய முடியாது, என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவிற்கினங்க, மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அத்துமீரலை உறுதிசெய்தபின், தீண்டாமை தடுப்பு சுவரை பெக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்க முற்படும் போது அப்பகுதி ஆதிக்க சாதி பெண்கள் தீண்டாமை தடுப்பு சுவரை இடிக்க விடாமல் தடுக்க முயற்சித்ததால் பலத்த காவல் பாதுகாப்போடு அச் சுவர் தற்காலிகமாக இடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்த தேசம் முழுக்க இது போண்ற எண்ணற்ற தீண்டாமை தடுப்பு சுவர்கள் தலித் மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒடுக்கிகொண்டிறுப்பது காலம் காலமாக நடந்துவரும் தொல்குடி மக்களுக்கு எதிரான நிகழ்வுதான்.

உத்திரபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமை தடுப்பு சுவருக்கும், கோவை பெரியார் நகரிலுள்ள தீண்டாமை தடுப்பு சுவருக்கும் பெரிய வித்தியாசமில்லை, இரண்டின் நோக்கமும் தலித் மக்களை தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து பிரிக்கவேண்டும், மேலும் அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்த வேண்டும் என்ற மிக கீழ்தரமான, கேவலமான எண்ண‌த்தோடு எழுப்பப்பட்டதே தவிர வேறோன்றும் காரண‌மில்லை.

ஓர் மாந‌கரிலேயே இப்படி தீண்டாமை தடுப்பு சுவரை எழுப்பி தங்களுடைய ஆதிக்கத்தை சாதி இந்துக்களால் நிலை நாட்ட முடிகிறதென்றால் உத்திரபுரத்தின் ஏன் நிகழாது? வெரும் தீண்டாமை தடுப்பு சுவர் மட்டும் கட்டினால் பிறச்சனை ஏற்படும் என்பதற்க்காக, மிக நூதனமாக காலணி துவங்கும் ஜீவா சாலையின் குறுகே ஓர் பிள்ளையார் கோயில் கட்டி அதன் பின் புறம் தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது, இப்படி மிக திறமையாக தீண்டாமையை கடைபிடிக்கும் இவர்களுக்கு ஏன் ஜனாதிபதி விருது வழங்கி கெளரவிக்க கூடாது?

நாட்டில் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் ஆதிக்க சாதி மக்கள் ஏழைமக்களை மீன்டும் மீன்டும் சுரன்டி கொழுத்து வருகிறார்கள் என்பதற்கு மேற் கண்ட இரண்டு தீண்டாமை தடுப்பு சுவர்களும் சாட்சி.

மனுதர்மத்தால் பெரும்பான்மையான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்க்காகவே, பெரியார் கடவுள் எதிப்பு இயக்கம் நடத்தினார், ஆனால் அவரின் பெயரில் நகர் அமைத்து, அவர் உடைத்தெரிந்த அதே வினாயகர் சிலையை வைத்தே மனுதர்மத்தை நிலைநாட்டும் இவர்களுக்காகத்தான் பெரியார் கடவுள் எதிப்பு இயக்கத்தையே நடத்தினார் என்பதை இவர்கள் அறிய முற்படதது மிக துரதிஷ்ட்டவசமானது.

ஓர் மனிதனின் சுதந்திரத்தைப் பரிக்கும் யாருக்கும் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமையேயில்லை, ஆதிக்க சாதிகள் பார்பனனிடமிருந்து விடுபட்டது போல், இன்று தலித் மக்கள் ஆதிக்க சாதிகளிடமிருந்து விடுபட முயற்சிக்கும் போது எண்ண‌ற்ற தீன்டாமை சுவர்கள் எழப்பப்படுவது வளர்சிக்கு வழிவகுக்காது. நிலங்களையும், வளங்களையும் பகிர்ந்தலிக்காமல் கழகங்கள் மிக கவனமாக, திட்டமிட்டே தலித் மக்களை ஒடுக்கிவருவது இந்த மண்ணின் பெருமையை குலைக்கும் முயற்சி.

இதுபோண்ற கழகங்களின் மலட்டு தத்துவங்களால் கைகள் கட்டப்பட்ட சில தமிழக தலித் மக்கள்/தலைவர்களால் தான் இந்த மண்ணில் இன்னும் தீண்டாமை தடுப்பு சுவர் நிலைத்து நிற்கிறது, இல்லையேல் என்றாவது ஒருநாள் பெர்லின் சுவர்போல் இடித்து நோறுக்கப்படுவது தீண்டாமை தடுப்பு சுவர் மட்டுமல்ல சாதி இந்துக்களின் ஆதிக்க மனப்பான்மையும்தான்.

News source: http://www.hindu.com/2010/01/31/stories/2010013157880100.htm
Readmore...
Tuesday, January 19, 2010

தமிழ் நாட்டில் த‌ர‌மிழ‌க்கும் 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

0 comments
 

ஓரு நாட்டின் வளம் அந்த நாட்டின் மனித வளத்தை வைத்தே கனிக்கப்படுகிறது, இப்படிபட்ட சூழலில் நம்முடைய தாய்நாட்டின் கல்வியை பற்றிய கவலை/கவனம் நம் எல்லோருக்கும் உண்டு, நாட்டின் தற்போதைய கல்வி தரம் சொல்லிக் கொள்ளும் அளவிலில்லை, மத்திய அரசின் உலகமையம்,தாராலமயம், தனியார்மயத்தில் கல்விகூடங்களுக்கும் விலக்கிலை.


அரசாங்கத்திடம் இருந்து கல்வித்துறை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசம் செல்வதை இன்று நாம் கண்கூடாக காண‌முடிகிறது, கோத்தாரி கமிஷன் பறிந்துரைப்படி மொத்த வருவாயில் 6 சதம் கல்விக்காக ஒதுக்க வேண்டும், அனைவருக்கும் கட்டாய பள்ளி கல்வி அளித்திட வேண்டும் என்ற எந்த கோறிக்கைக்கும் மத்திய அரசு செவிசாய்க்காமல், மன்(ண்) மோகன் ஒபாமாவின் பின்னாலேயே அலைந்துகொன்டிருக்கிறார்.


தமிழக அரசைப் பொருத்த‌வரை, கலைஞர் ஒரு கில்லாடி, எதையும் ஆய்ந்து அறிவியல் பூர்வமாக? செய்வதில் அவருக்கு நிகர் அவரே! ஆம் இங்கு ஓட்டலில் மட்டன் சாப்பிடுவதைபோல காசுக்கு பட்டம் வாங்கலாம், இதை நான் சொல்லவிலை இந்த கேவலமான நிலையைக் கண்டு, மத்திய அரசு கடந்த ஜனவரி 18ல் உச்ச நீதிமன்றத்திற்கு ஓர் அரிக்கை சமர்பித்தது, அதில் இந்தியாவில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அந்தஸ்த்தை விலக்கிகொல்வதாக கூறியுள்ளது, இதில் தமிழகத்தை சேர்ந்த கீ.வீரமனியின் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் என 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அபேஸ் ஆகின்றன.


இந்தியாவிலெயே அதிக‌ எண்ணிக்கையில் த‌ர‌மிழ‌க்கும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் த‌மிழ‌க‌த்தில் தான் அதிக‌ம், அத‌னால்தான் எண்ணவோ இங்கு இர‌ண்டு க‌ல்வி அமைச்ச‌ர்க‌ளைப் போட்டு யாவார‌த்தை ரொம்ப‌ நுனுக்க‌மாக‌ ந‌ட‌த்துகிறார்க‌ளோ?


த‌ர‌மிழ‌க்கும் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பட்டியல்:

Christ College, Bangalore Vignan's Foundation for Science, Technology and Research, Guntur, Andhra Pradesh Lingaya's University, Faridabad St Peter's Institute of Higher Education and Research, Chennai Noorul Islam Centre for Higher Education, Kanyakumari Jaypee Institute of Information Technology, Noida Shobhit Institute of Engineering and Technology, Meerut Sumandeep Vidyapeet, Vadodara, Gujarat Sri Devraj Urs Academy of Higher Education and Reserch, Kolar, Karnataka Yenepoya University, Mangalore BLDE University, Bijapur, Karnataka Krishna Institute of Medical Sciences, Satara, Maharashtra D Y Patil Medical College, Kolhapur, Maharashtra Meenakshi Academy of Higher Education and Research, Chennai Chettinad Academy of Research and Education, Kanchipuram HIHT University, Dehradun Santosh University, Ghaziabad Maharshi Markandeshwar University, Ambala, Haryana Manav Rachna International University, Faridabad Sri Siddhartha Academy of Higher Education, Tumkur, Karnataka Jain University, Bangalore Tilak Maharashtra Vidyapeeth, Pune Siksha "O" Anusandha, Bhubaneswar Janardan Rai Nagar, Udaipur, Rajasthan Institute of Advanced Studies in Education of Gandhi Vidya Mandir, Sardarshahr, Rajasthan Mody Institute of Technology, Sikar, Rajasthan Dr MGR Educational and Research Institute, Chennai Saveetha Institute of Medical and Technical Sciences, Chennai Kalasalingam Academy of Research and Education, Virdhunagar, Tamil Nadu Periryar Maniammai Institute of Science and Technology, Thanjavur Academy of Maritime Education and Training, Chennai Vel's Institute of Science, Technology and Advanced Studies, Chennai Karpagam Academy of Higher Education, Coimbatore Vel Tech Rangaraja Dr Sagunthal R&D Institute of Science, Chennai Gurukul Kangri, Haridwar Grapich Era University, Dehradun Nehru Gram Bharati Vishwavidyalaya, Allahabad Sri Balaji Vidyapeeth, Puducherry Vinayaka Mission's Research Foundation, Salem, Tamil Nadu Bharath Institute of Higher Education And Research, Chennai Ponnaiya Ramajayam Institute of Science and Technology, Thanjavur, Tamil Nadu Nava Nalanda Mahavira, Nalanda, Bihar Rajiv Gandhi National Institute of Youth Development, Sriperumbudur, Tamil Nadu National Museum, Institute of the History of Art Conservation and Musicology, Janpath, New Delhi


Readmore...
Wednesday, January 13, 2010

இந்தியன் ஹாக்கி‍‍‍ ‍: கலையும் கணவுகள்

1 comments
 

இந்திய தேசிய விளையாட்டு என்று போற்றப்படும் ஹாக்கி, முன் ஒருகாலத்தில் உலகையே உலுக்கியெடுத்தது, 1928இல் நெதெர்லெந்தில் தொடங்கி 1956 மெல்பர்ன்(ஆஸ்த்திரேலியா) ஒலிம்பிக் வரை இந்திய அணி தொடர்ந்து ஆறு முறை தங்கம் வென்று சாதனைப்படைத்தது, அதன் பிறகு ஜப்பான் மற்றும் இரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம், என மொத்தம் 8 ஒலிம்பிக் தங்கம்,ஒரு உலக கோப்பையில் தங்கம், ஆசியா போட்டிகளில் 4 தங்கம் என 13 தங்கம் மேலும் எண்ண‌ற்ற வெள்ளி, வெங்கலம் என கலக்கிகொண்டிருந்த இந்த அணிமீது யார் கண்பட்டதோ, இன்று இது ஆசியா கோப்பைக்குகூட தகுதி பெறமுடியாமல் போனது.

ஒரே ஒரு முறை மட்டுமே உலககோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மரியாதை, பொண், பொருளில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ஹாக்கி வீரர்களுக்கு கிடைக்க வில்லை என தெறிந்தும், அரசால் திட்டமிடப்பட்டே இந்த விளையாட்டை இந்தியாவில் பொலிவிழக்க செய்துவிட்டனர்.

இந்திய ஹாக்கி வீரர்கள் சில ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்க்காக இன்று பயிற்சியை புறக்கனித்து தங்களுடைய எதிற்ப்பை தெறிவித்தும் கூட ஆளும் தர‌ப்பு அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்பது இந்த தேச விளையாட்டை மட்டுமல்ல இந்த தேசத்தையே அவமானப்படுத்துவாதாகத்தான் அர்த்தம்.

தென்டுல்கர் மற்றும் தன்ராஜ் பிள்ளையும் ஒரே ஆண்டில் அவரவர் விளையாட்டுக்கு நுழைந்தார்கள், ஆனால் தென்டுல்கரின் நிலை யென்ன, பிள்ளையின் நிலை என்ன? தன்ராஜ் பிள்ளை என்ற‌ அந்த வீரன் நான்கு பாக்கிஸ்தான் ஹாக்கி வீரனுக்கு சமம் என வர்னிக்கப்பட்டவரின் திறமையை இந்த ஹாக்கி போர்ட் சரியாக பயன்படுத்தியாதா?


ஹாக்கி தெரியாதவர்னெல்லாம் ஹாக்கி போர்டில் இருந்துகொன்டு அரசியல் செய்துகொண்டிருகிறார்கள், இந்திய ஹாக்கி இந்த 2010 லாவது சீர் பெற்று, வெற்றி வாகை சூடவில்லையேல், ஹாக்கி என்ற விளையாட்டையே மக்கள் மறந்துவிட வேண்டியதுதான்.
Readmore...
Friday, January 1, 2010

சிபுசோரன்‍‍: சனநாயகத்தின் தேர்வு சரிதானா?

1 comments
 
லை,காடு,புற்புதறுகள் நிறைந்த ஜார்கன்ட் மாநிலத்தின் வரைபடம் ஓர் கசங்கிய காகிதம்போல் சுறுங்கி கிடக்கிறது, சிறிய மாநிலமானாலும் தேசிய அள‌வில் பெரும் எதிற்பார்போடு தேர்தல் நடந்தது, எப்பொதும் போல காங்ரஸ் கனியை பறித்துவிட துடித்தது, ஆனால் அந்த கரடுமுரடான காடுகளைப் போல அந்த மன்னின் மைந்தன் சிபுசோரன் ப.ஜ.க துனையுடன் அரியனையேறிவிட்டர், இதில் ஆத்திரம‌டைந்த காங்கிரஸ் இஷ்டத்திற்க்கு ப.ஜ.கவை திட்டி தீர்த்துவிட்டது, இருப்பினும் தன் நிலையில் எந்தவித மாற்றமுமின்றி சிபுசோரன் ஆட்சியமைக்க ப.ஜ.க உதவியாது ஓர் அறிய நிகழ்வுதான்.

ஜார்கன்டின் முன்னால் முதல்வர் மதுகொடா நாலாயிம் கோடி ஊழலில் சிக்கி சின்னாபின்னமாகிய செய்தி முடிவதற்க்குள், மற்றொரு குற்றவளி முதல்வராயிருக்கிறார்.

சிபுசோரன் போலிஸ், வழக்கு, சிறை என எல்லாவற்றையும் பார்த்தவர், பல வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில் முதல்வரான சோரன் இனி வழக்குகளின் போக்கையே மாற்றிவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை, வழக்கம்போல் அதிகார சாட்டையால் சனநாயகத்தை வாட்டியெடுத்துவிடுவார்.

கொலை செய்தவனைக்காட்டிலும் ஊழல்செய்தவனுக்கு சீனாவில் உடனடி தன்டனை கொடுத்து மரணத்தை முத்தமிட வைத்துவிடுகிறார்கள், ஆனால் இந்தியாவில் விசானை கமிஷ‌ன் வைத்தே காலத்தைக் கடதிவிடுகிறார்கள், இதனால் ஊழல் பெருச்சாலிகளின் மடியிலேயே நாடு இருக்கிறது.

கற்பனைக்கெட்டாத வகையில் ஊழல்செய்து பணத்தில் மிதக்கும் ஊழல் பெருச்சாலிகளுக்கு இந்த மக்கள் ஓட்டுபோட வெட்கப்படுவதே இல்லை, சில லட்சம் ஊதியம் பெரும் எம்.பி பதவிக்கு பல ஆயிர‌ம் கோடி செலவிடுவது சனநாயகத்தை காக்க அல்ல, சிலறின் சொத்துக்களை காக்க மட்டும் என்பதை மக்கள் ஏன் மறந்துவிடுகிறார்கள்?
Readmore...