Pages

Banner 468

Subscribe
Wednesday, January 13, 2010

இந்தியன் ஹாக்கி‍‍‍ ‍: கலையும் கணவுகள்

1 comments
 

இந்திய தேசிய விளையாட்டு என்று போற்றப்படும் ஹாக்கி, முன் ஒருகாலத்தில் உலகையே உலுக்கியெடுத்தது, 1928இல் நெதெர்லெந்தில் தொடங்கி 1956 மெல்பர்ன்(ஆஸ்த்திரேலியா) ஒலிம்பிக் வரை இந்திய அணி தொடர்ந்து ஆறு முறை தங்கம் வென்று சாதனைப்படைத்தது, அதன் பிறகு ஜப்பான் மற்றும் இரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தங்கம், என மொத்தம் 8 ஒலிம்பிக் தங்கம்,ஒரு உலக கோப்பையில் தங்கம், ஆசியா போட்டிகளில் 4 தங்கம் என 13 தங்கம் மேலும் எண்ண‌ற்ற வெள்ளி, வெங்கலம் என கலக்கிகொண்டிருந்த இந்த அணிமீது யார் கண்பட்டதோ, இன்று இது ஆசியா கோப்பைக்குகூட தகுதி பெறமுடியாமல் போனது.

ஒரே ஒரு முறை மட்டுமே உலககோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மரியாதை, பொண், பொருளில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ஹாக்கி வீரர்களுக்கு கிடைக்க வில்லை என தெறிந்தும், அரசால் திட்டமிடப்பட்டே இந்த விளையாட்டை இந்தியாவில் பொலிவிழக்க செய்துவிட்டனர்.

இந்திய ஹாக்கி வீரர்கள் சில ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்க்காக இன்று பயிற்சியை புறக்கனித்து தங்களுடைய எதிற்ப்பை தெறிவித்தும் கூட ஆளும் தர‌ப்பு அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்பது இந்த தேச விளையாட்டை மட்டுமல்ல இந்த தேசத்தையே அவமானப்படுத்துவாதாகத்தான் அர்த்தம்.

தென்டுல்கர் மற்றும் தன்ராஜ் பிள்ளையும் ஒரே ஆண்டில் அவரவர் விளையாட்டுக்கு நுழைந்தார்கள், ஆனால் தென்டுல்கரின் நிலை யென்ன, பிள்ளையின் நிலை என்ன? தன்ராஜ் பிள்ளை என்ற‌ அந்த வீரன் நான்கு பாக்கிஸ்தான் ஹாக்கி வீரனுக்கு சமம் என வர்னிக்கப்பட்டவரின் திறமையை இந்த ஹாக்கி போர்ட் சரியாக பயன்படுத்தியாதா?


ஹாக்கி தெரியாதவர்னெல்லாம் ஹாக்கி போர்டில் இருந்துகொன்டு அரசியல் செய்துகொண்டிருகிறார்கள், இந்திய ஹாக்கி இந்த 2010 லாவது சீர் பெற்று, வெற்றி வாகை சூடவில்லையேல், ஹாக்கி என்ற விளையாட்டையே மக்கள் மறந்துவிட வேண்டியதுதான்.
Readmore...