Pages

Banner 468

Subscribe
Wednesday, March 3, 2010

வாழ்க‌ நித்தியானந்தம்! வ‌ள‌ர்க‌ ஊட‌க‌ அர‌சிய‌ல்!!

1 comments
 
"உலகில் கடவுளேன்னு எதுவுமில்லை, கடவுளைத்தவிர உலகில் வேறொன்றுமே இல்லை" என 2000 ஆண்டுக‌ளுக்கு முன்பே புகழ் பெற்ற புத்த தத்துவ ஞானி நாகர்ஜீனா(சிலர் சமஸ்கிருத அறிஞர் என்றும் கூறுவர்) அவர்கள் சொண்ண‌தாக பன்டித நேரு தன் கண்டுனர்ந்த இந்தியா(Discovery of India) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மனிதன் இயற்க்கையோடு இனைந்து வாழ்ந்த காலத்தில் மதம் தோண்றவில்லை, அவன் நாகரீக முதிற்ச்சி அடைந்த பின்பே மதம் தேவைப்பட்டது, அன்று முதல் இன்றுவரை ஒருசிலர் கடவுளை எதிற்ப்பதும் சிலர் கடவுளை ஆதறிப்பதும் தொடர்கிறது.

சக மனிதனின் மீது நம்பிக்கை குறையும் போதும், தன்னம்பிக்கை துவளும்போதும் நமக்கு கடவுள் தேவைப்படுகிறார், கடவுளின் தேவையும், கடவுள் எதிற்ப்பும் இந்த பூமியில் கடைசி மனிதன் உள்ளவறை தொடறும், மதங்களின் பெயரால் ஏற்பட்ட போர்களும், அவற்றால் ஏற்பட்ட மனித இழப்புகளும் மதங்களுக்கு இருப்பு கொடுத்ததே தவிர மனிதனுக்கு படிப்பு கொடுக்கவில்லை.

இன்னிலையில் இன்றைய நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திக்கொண்டு மதம் த‌மது வேர்களை மிக ஆழமாக மனிதன் மேல் பதித்துள்ளது, பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் மத்திற்க்கு அடிமை என சொல்லாம், இப்படி வாழ அவன் வெட்கப்படுவதில்லை, ஏனெனில் சுயநலம் நம்மை ஆக்கிற‌மித்துக் கொண்ட போது, நாமக்கு கடவுளைத்தவிர வேறு வழியில்லை, அதனால்தான் இந்த தேசத்தில் பட்டினியால் மக்கள் வாடும்போது திருப்பதி உண்டியல் நிரம்பி வழிகிறது, கொடுப்பதில் உள்ள சுகத்தை உண‌ரா சமூகத்தை ஆண்மீகத்தால் திருத்த முடியாது என்பதையே நித்தியானந்ததின் அந்தரங்க காட்சியும் அதன் எதிர்வினையும் நமக்கு உணர்த்துகிறது.

வாழ்க‌ நித்தியானந்தம்! வ‌ள‌ர்க‌ ஊட‌க‌ அர‌சிய‌ல்!!
Readmore...