Pages

Banner 468

Subscribe
Saturday, November 13, 2010

நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான ஆங் சான் சூகி விடுதலை!!

3 comments
 
நோபல் பரிசு பெற்ற பெண் அரசியல் தலைவரான மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி இன்று விடுதலை செய்யப்ப்பட்டார். மியான்மர் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலிலும், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.


மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களுக்கு, பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும், அங்கு தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி அமைக்க வேண்டும் என உலக நாடுகள் அந்நாட்டு இராணுவ அரசை வற்புறுத்தி வந்தன.


இந்நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யங்கூனில் உள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

3 Responses so far.

  1. ஜனநாயகம் மலர வாழ்த்துக்கள்

  2. Radhika says:

    Thanks for sharing this post. The blog content is excellent.
    Andhra Pradesh ncvt mis iti result 2018

  3. payal says:

    Outstanding information! Thanks for sharing the post. I want to share the admit card details.
    RRB Gorakhpur Admit Card

Leave a Reply