Pages

Banner 468

Subscribe
Saturday, October 24, 2009

கூகிளை இயக்குவதும் தமிழன் தான்!

0 comments
 


எப்போதுமே தேடுபொறியின் ராஜா கூகிள்தான், இனையத்தை தெறிந்தவர்கள் அத்தனைபேருக்குமே கூகிளையும் தெரியுமென்பதில் வியப்பில்லை ஆனால் ஆனான‌ப்பட்ட மைக்ரோ சாப்ட்க்கே தண்ணிகாட்டும் இந்த கூகிள் பில்லியன் கணக்கில் கல்லாகட்டும் ஓர் நிறுவனம், இதில் உள்ள ஒன்பது இயக்குகர்ளில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பது வியப்பாகத்தானிறுக்கிறது.

இதும‌ட்டும‌ல்ல‌ ச‌மிப‌த்தில் கூகில் நிறுவ‌ன‌ ப‌ங்குதார‌ர்க‌ள் (class A) ம‌த்தியில் ந‌ட‌த்திய‌ வாக்கெடுப்பில் இவ‌ர் அதிக‌ வாக்கு பெற்று ப‌ங்குதார‌ர்க‌ளின் ஏகோபித்த‌ நம்பிக்கைக்கு உரிய‌வ‌ர் என‌ தேர்வுசெய்ய‌ப்ப‌ட்டுள்ளார், இதில் விய‌ப்பெணண‌‌வென்றால் கூகிளின் நிறுவ‌ன‌ர்க‌ளான‌ எரிக் ம‌ற்றும் பேஜ் ஆகியோறை காட்டிலும் அதிக‌ வாக்கு பெற்றுள்ளார் இந்த‌ த‌மிழ‌ர்!

சென்னைய‌ச் சேர்ந்த‌ கே.ராம் சிரிராம்(53) கூகீள் தேடுபொறியின் சுமார் 3.4 மில்லிய‌ன் ப‌ங்குக‌ளை வைத்துள்ளார்(சுமார் 1 பில்லிய‌ன் டால‌ர்), இவ‌ர் த‌ன்னுடைய‌ ப‌ள்ளி ப‌டிப்பு சென்னையில் படித்தார் மேலும் இளம் அறிவிய‌லை சென்னை ப‌ல்க‌லையிலும் பின் எம்.பி.எ வை மெக்சிக‌ன் ப‌ல்க‌லையிலும் ப‌யின்ற‌வ‌ர் பின்பு ஜ‌ங்கிள், அமேசான் போன்ற‌ இனைய‌ த‌ள‌ங்க‌ளில் முக்கிய‌ ப‌த‌வியில் இருந்தார்.

90 வாக்கில் தேடுபொறியில் யாரும் முத‌லீடு செய்ய‌ ப‌ய‌ந்த கால‌க‌ட்ட‌த்தில் கூகிளில் முத்லீடு செய்து இன்று கூகிளின் இயக்குகளில் ஒருவராக‌ க‌ட‌ந்த ப‌ல ஆண்டுக‌ளாக‌ செய‌லாற்றி வ‌ருகிறார். மேலும் இவ‌ர் கூகிளின் ஆடிட்டிங் துறையின் தலைமையாகவும் செயலாற்றிவருகிறார், இவ‌ரின் ஒப்புத‌ல் இல்லாம‌ல் கூகிள் எந்த‌ விற்ப‌னையோ அல்ல‌து கைய‌க‌ப்ப‌டுத்துத‌லோ ந‌ட‌க்காது ஆக‌ கூகிளை ந‌ட‌த்துவ‌தில் இந்த த‌மிழ‌னின் ப‌ங்கு முக்கியமானது, ராமை வாழ்த்துவோம்! வாழ்க! வளர்க!!
Readmore...
Saturday, May 30, 2009

கொத்தடிமைகளாய் வாழும் த‌மிழ‌ர்க‌ள்

0 comments
 

நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது, மக்களாட்சி நாடைபெறுகிறது மேலும் எண்ணற்ற அரசியல் சமூக மற்றும் பொருளாதார சீர்திறுத்தங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன,ஆனால்ஏழைகளின் துயர்தீர்க்க இவைஎதுவும்உதவுவாதாய் தெறியவில்லை.


கடந்த வெள்ளியன்று (29.05.2009)தின்டிவனத்தை அடுத்த செஞ்சி தாலுக்காவில் உள்ள தனியார் கல்குவாரியில் கொத்தடிமையாய் இருந்த சுமார் 26 மக்களை தின்டிவனம் கோட்டாச்சியர் மீட்டு அவர்களுக்கு தலா 1000 மறுவாழ்விற்க்காக வழங்கப்பட்டு சொந்த கிராமத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மே30ம் தேதி தினமணி நாள் இதழ் செய்திவிளியிட்டுள்ளது. ஆனால் அந்த தனியார் கல்குவாரி யாருடையது, அந்த முதலாலி மீது என்ன வழக்கு தொடரப்பட்டது போண்ற எந்த குறிப்பும் இல்லை.


இந்தியா ஒளிர்கிற‌து, த‌மிழ‌க‌ம் த‌ழைக்கிறது என‌ வ‌ர்த்த‌க‌ விள‌ம்ப‌ர‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் பிற‌ச்ச‌னையை ஓர் பொருட்டாக‌வே எடுத்துக்கொள்வ‌தில்லை, த‌மிழ‌க‌த்தில் சுமார் ஒரு ல‌ட்ச‌த்திற்க்கும் மேற்ப‌ட்ட‌ குடும்ப‌ங்கள் செங்கல் சூலை, ப‌ட்டாசு தொழிற்சாலை, தோட்ட‌ வேலை, செராமிக் வேலை போண்ற‌ ப‌ல்வேறு தொழிற்சாலையில் கொத்த‌டிமைக‌ளாக‌ உள்ளார்க‌ள் என‌ ஓர் ஆய்வ‌ரிக்கை தெறிவிக்கிற‌து. இந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ன‌த்தை ஆயிர‌ம் ஆயிர‌ம் கோடிகளாய் ஏய்து ச‌க‌ல‌ வ‌ச‌தியோடு வ‌ளம்வரும் அரசியல் முதலாலிகள் ஏகபோகத்துடன் வாழ‌, குடும்ப‌ செல‌விற்காக‌ தாம் கைநீட்டி வாங்கிய‌ ஒருசில‌ ஆயிர‌த்திற்க்காக‌வா ஓர் குடும்ப‌ம் வாழ்நாள் முழுதும் கொத்த‌டுமையாய் வாழ்வ‌து?


ஏழைக‌ளாய் பிற‌ந்துவிட்ட‌தை த‌விர‌ இவ‌ர்க‌ள் செய்த‌ பாவ‌மென்ன‌? க‌ன‌விலும் தீங்குநினைக்காது, விதியை நினைத்து உயிர்வாழும் இந்த‌ ஊமை ம‌க்களின் துய‌ர் வார்த்தைக‌ளால் எழுத‌ முடியாதவை. எல்லாவ‌ற்றிற்கும் ஓரே வ‌ழி க‌ல்விதான் என்றாலும் கொத்த‌டிமைகளின் குழ‌ந்த‌க‌ளும் அங்கேதான் அடிமையாய் வாழ‌வேண்டும். உடல் ம‌ற்றும் ம‌ன‌ ரீதியான‌ தாக்குத‌லோடு பாலிய‌ல் வ‌ன்புண‌ர்சிக்கும் ஆளாகும் இம்ம‌க்க‌ளின் வாழ்வு ரோமபுரியில் அடிமைகளாய் இருந்த ஸ்பார்டகன்ஸ் வாழ்வை நினைவுபடுத்துகிறது, ஓர் போர்கைதிகளுக்கு நிகரான துன்பிய‌ல் ப‌ட‌ல‌த்தைக் சும‌ந்துள்ளது.

த‌ம் சொந்த‌ ம‌ண்ணிலேயே சுர‌ண்ட‌ப்ப‌ட்டு அடிமைக‌ளாய் வாழும் இந்த கொத்தடிமைகளின் நிலையும், ஈழ‌த்தில் சிங்க‌ள‌ இன‌ வெறிய‌ர்காளால் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்டு நாடிழ‌ந்து, வீடிழ‌ந்து வாழும் எம் தாய்வாழி ம‌க்க‌ளின் நிலையும் ஏற‌க்குறைய‌ ஓன்றே!


இல‌ங்கை த‌மிழ்ம‌க்க‌ளின் துய‌ர்போக்க‌ த‌மிழ்நாட்டில் தீக்குளிக்கிறார்க‌ள், தீர்மான‌ம் போடுகிறார்க‌ள் ம‌ற்றும் ஊர்வ‌ல‌ம், உண்ணா நிலை என‌ அத்துனை வ‌ழியையும் ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள் ஆனால் இதே த‌மிழ்நாட்டில் கொத்த‌டிமைக‌ள், ம‌னித‌க‌ழிவை ம‌னித‌னே சுத்த‌ம்செய்வ‌து, குழ‌ந்தை தொழிலாளர்க‌ள் என மிக கொடுமையான ச‌மூக‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கு இந்த‌ சேகுவேராக்க‌ள் ஏன் செவிசாய்ப‌தில்லை? அட‌ உங்க‌ள் சாதியையா நாங்க‌ள் ம‌ற‌க்க‌ச் சொல்லுகிறோம்? தமிழ‌ர்க‌ளாலேயே சிறைபிடிக்க‌ப்ப‌ட்ட இந்த‌ கொத்தடிமை த‌மிழ்க‌ளை குறைந்த‌ப‌ட்ச‌ம் ம‌னித‌க‌ளாகவாது உங்க‌ள் முத‌லாலிக‌ள் வாழ‌விட‌க்கூடாதா?


கொத்தடிமைமுறை இல‌ங்கையின் இன‌ பிற‌ச்ச‌னைக்கு இனையான‌தென‌ நான் இங்கு வாத‌ம் செய்ய‌வில்லை, ஆனால் தமிழகத்தில், தமிழர்களால் சிறைபிடிக்க‌ப்ப‌ட்ட இந்த‌ கொத்தடிமை சமூகத்திற்க்கு ஏன் த‌மிழ் ஆர்வ‌ள‌ர்க‌ளும் ந‌டுநிலைவாதிக‌ளும் குற‌ள் கொடுப்ப‌தில்லை?


இவை வெறும் மேலோட்ட‌மான‌ கேள்விக‌ள்தான் ஆனால் இத‌ற்க்கான‌ ப‌தில்க‌ள் மிக‌ நூட்ப‌மானவை, மாபெறும் வ‌ஞ்ச‌க‌ வாறலாற்று பின்ன‌னி கொண்ட‌து. வ‌ட‌நாட்ட‌வ‌ர்க‌ள் த‌மிழ‌க‌த்தில் இந்தியை புகுத்திய‌ போது இங்கு திராவிட‌ இய‌க்க‌த்த‌வ‌ர்க‌ள் த‌ண்ட‌வாள‌த்தில் த‌லைவைத்து த‌மிழ‌க‌ம் முழுதும் போராட்ட‌ம் ப‌ல‌ ந‌ட‌த்தினார்கள், ஆனால் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ள் இன்று ஆங்கில‌ வ‌ழி க‌ல்வியோடு இந்தியையும் ப‌யின்று க‌ணிப்பொறித் துறையில் காலாட்டிக் கொண்டு உள்நாட்டிலேயே டால‌ர் ச‌ம்பாதிக்கிறார்க‌ள்,


அந்தோ ப‌ரிதாப‌ம்! அவ‌ர்ளைவிட‌வும் அதிக‌ எண்ணிக்கையில் த‌டிய‌டிப்ப‌ட்டு, குன்ட‌டிப்பட்டு இந்தி எதிர்த்த‌ குலங்கள் இன்னும் கொத்த‌டிமையாக‌ வாழ்ந்துவ‌ருகிறார்க‌ள். இந்தி த‌மிழ்நாட்டை ஆண்டால் நிலமற்ற இங்குள்ள ஏழைகள் வடநாட்டிற்க்கு பிழைக்க சென்றுவிட்டால் தமிழக நில முத‌லாலிக‌ளுக்கு கொத்த‌டிமை செய்ய‌ தெலுங்க‌னா வ‌ருவான்? என‌ யோசித‌ இந்த‌ குள்ள‌ந‌ரி த‌ந்திர‌த்தால் இன்னும் இந்த‌ இழிநிலை தொட‌ர்கிற‌து.


இருமொழிக்கொள்கை கொண்ட‌ த‌மிழ் நாட்டில் அர‌சு ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளின் ஆங்கில‌ அறிவை வ‌ள‌ர்க்க‌ எந்த‌ அர‌சும் திட்ட‌ம் வ‌குக்க‌ வில்லை, ஏனென்றால் சேரியில் இருப்ப‌வ‌னுக்கு ஆங்கில‌ம் தெறிந்துவிட்டால் மாடியில் இருப்ப‌வ‌னுக்க‌ல்லவா பிர‌ச்ச‌னை என‌ மிக‌ தீர்க்க‌மாக எண்ணி , சேரியில் வாழ்ப‌வ‌னுக்கு எல்லா வழியையும் மூடிம‌றைத்து, மொட்டையடித்து ப‌ட்டை நாம‌த்தையால்ல‌வா சாத்தினார்க‌ள் இந்த‌ நாத்திக‌ சிகாம‌ணிக‌ள்!


கொத்த‌டிமைக‌ள், ம‌னித‌க‌ழிவை ம‌னித‌னே சுத்த‌ம்செய்வ‌து, குழ‌ந்தை தொழிலாள‌ர்க‌ள், சாதிய‌ ம‌ற்றும் பாலிய‌ல் வ‌ன்முறைக‌ள் என‌ த‌மிழ‌க‌த்தில் த‌லைவிரித்தாடும் இந்த‌ அடிமைக‌ள் நிலையை இங்கு வாழும் ச‌க‌ அடிமைக‌ளே க‌ண்டுகொள்ளாத‌ நிலை நீடிக்கிற‌து. வெறும் நோயில்லாம‌ல் வாழ்வ‌து ம‌ட்டுமே ஆரோக்கிய‌மான‌ வாழ்வு இல்லை, ஒரு ம‌னித‌ன் உட‌ல் ரீதியாக‌வும், ம‌ன‌ ரீதியாக‌வும் ஆரோக்கிய‌மாக‌ வாழ்வ‌தே ந‌ல்வாழ்வு என‌ உல‌க‌ சுகாதார‌ நிறுவ‌ன‌ம்(WHO) கூறுகிற‌து. ஆக‌ ஒட்டுமொத்தத்தில் ந‌ம்மில் 80 ச‌த‌ ம‌க்க‌ள் இந்த‌ நாட்டில் ந‌ல்வாழ்வு வாழ‌வில்லை என்ப‌து தெளிவு. அடித்த‌ட்டு ம‌க்க‌ளின் பிர‌ச்ச‌னைகளை முன்னிறுத்த‌ இங்கு அமைப்புக‌ள் இல்லாத‌தும், இதுபோண்ற‌ த‌னிம‌னித‌ குற‌ள்க‌ள் த‌க‌ர்ந்துவிடுகிற‌து.


ச‌ம‌த‌ர்ம‌ ச‌ட்ட‌ம் எழுத‌ இனி அம்பேட்க‌ர் பிற‌க்க‌ப்போவ‌தில்லை, க‌றுப்ப‌னும் வெள்ளைய‌னும் க‌ல‌ந்துவாழ‌ க‌ன‌வுக‌ண்ட‌ லூத‌ர் கிங்கும் வ‌ர‌ப்போவ‌தில்லை என‌ சிங்குக‌ள் நினைத்த‌தால்தான் இன்று ப‌ஞ்சாப்பில் இர‌த்த ஆறு ஓடுகிற‌து, ஆஸ்திரியாவில் தேள்க‌டிக்க‌ அமிர்த‌ர‌சில் நெடியேறுகிற‌துதென்றால் அது ப‌ஞ்சாபில் உள்ள‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் த‌ன்மான‌த்தைய‌ல்ல‌வா ப‌றைசாற்றுகிற‌து? ஆனால் இதெல்லாம் ஏதோ அடுத்த‌ க‌ண்ட‌த்தில் ந‌டைபெறுவ‌தாக‌ எண்ணிக்கொண்டிறுந்தால் நாம் விடுத‌லையை வெல்வ‌த‌ற்க்கும் த‌குதியான‌வ‌ர்க‌ளில்லை, விடுத‌லை என்ற‌ வார்த்தையை சொல்வ‌த‌ற்க்கும் த‌குதியான‌வ‌ர்க‌ளில்லை!


க‌ண்முன்னே ந‌ட‌க்கும் இதுபோண்ற‌ அடிப்ப‌டை ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை க‌ண்டும் காணாம‌ல் இருப்ப‌தென்ப‌து பாதிக்க‌ப்ப‌டும் இம் ம‌க்க‌ளை வெறுப்ப‌த‌ற்க்கு ச‌மமான‌த‌ல்ல‌வா?
Readmore...
Wednesday, May 13, 2009

போலி மொழி இன‌ வாத‌ம்

0 comments
 

எல்லா தேர்தலிலும் புறக்கனிக்கப்படுவது தலித் மக்கள் மட்டுமே. வெறும் வாக்கு வ‌ங்கிக‌ளாக‌வே த‌லித்துக‌ளை அர‌சிய‌ல்வாதிக‌ள் பார்பதால் இம்மக்களின் விடுதலை வெறும் ஏட்டலவே உள்ளது, இதற்க்கு எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும், தலித மக்களின் சமூக விடுதலைக்கு பெரும் தடைக்கல்லாக‌ இருப்பது அரசியல் அதிகாரம் மட்டுமே.

தெற்க்காசிய பிராந்தியத்தில் எங்குமே இல்லாத சமூக‌ அமைப்பு இந்த நாட்டில் நிலைத்திருப்பதும், முதலாலித்துவ‌ அர‌சிய‌ல் புரோக்க‌ர்க‌ளால் இந்த‌ நாட்டின் ச‌ன‌நாய‌க‌ம் உயிர் இழ‌ந்த‌ பின்னும் தேர்தல் எனும் சடங்கு அரங்கேறுவதற்க்கும் நம் நாட்டின் அரசியலமைப்பே காரணம், இந்தகைய அரசியலமைப்பை வடிவமைத்த டாக்ட‌ர் அம்பேட்க‌ரும் அத‌ற்க்கு வாய்ப‌ளித்த‌ நேருவும் போற்றுதலுக்குறியவர்கள்.

சமூகத்தின் எல்லா நிலைக‌ளிலும் தீண்டாமையை நிலைநிறுத்த‌ விரும்பிய காந்தி போண்ற‌ ம‌த‌வாத‌ ச‌க்திக‌ளிட‌மிருந்து த‌லித் ம‌க்க‌ளை காப்பாற்ற‌ வ‌லிமையான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் தேவை என உண‌ர்ந்த‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ர் த‌ன்னுடைய மிக க‌டின‌ உழைப்பால் ஏற்ப‌டுத்திய‌ இச் ச‌ட்ட‌ங்க‌ளே இந்தியாவில் வாழும் ஒவ்வொரு த‌லித் ம‌க்களின் பாதுகாப்பு அர‌ன். துர‌திஷ்ட‌வ‌ச‌மாக‌ இன்று ச‌ட்ட‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌மும், அதிகார‌ வ‌ர்க‌த்திட‌மும் உள்ளதால் நீதிம‌ன்றத்தில் கூட‌ த‌லித் ம‌க்க‌ளுக்கு அனிதீ இழ‌க்க‌ப்ப‌டுகிற‌து.

தென்னிந்தியாவை விட கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய வட இந்திய தலித் மக்கள் தங்களுக்குள்ள அரசியல் அதிகாரத்தை மிக வலிமையாக பயன்படுத்தி வருகிறார்கள், குறிப்பாக உத்திரபிரதேசத்தில் தலைவர் கன்ஷிராம் ஏற்படுத்திய ப‌குசன் சமாஜ் கட்சி இன்று நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றி சகோதரி மாயவதி ஆட்சி அதிகாரம் செய்துவருகிறார், இதுமட்டுமலாமல் பிரதமர் பதவியே என் இறுதி லட்சியமென சபதமெடுத்து உழைத்தும் வருகிறார்.

ஆனால் தமிழகத்திலோ நிலமை தலைகீழ், ஓரு எம்.பி சீட்டிற்கே நாம் திராவிடக் கட்சிகளின் காலில் விழவேண்டியிருகிறதே ஏன்? காங்ரஸ் கட்சி துவங்கும் முன்பே தலித் அரசியல் பேசிய தமிழக‌ தலித் மக்கள் இனறு வரை ஒரு நிலையான அரசில் கட்சியை நடத்த முடியவில்லையே ஏன்?

1970 வாக்கில் காங்கிர‌ஸில் இருந்து விலகி தனிகட்சி துவக்கிய ஐயா இளயபெருமாள் இரண்டு சட்டமன்ற தொகுதியை கைப்ப‌ற்றியும் கூட‌ நிலைத்து நிற்க்க‌ முடிய‌வில்லை. தென் த‌மிழ‌க‌த்தில் புதிய‌ த‌மிழ‌க‌த்தை துவ‌க்கிய‌ டாக்ட‌ர் கிருஷ்ண‌சாமிக்கும் இதே நிலை. வ‌ட‌ ப‌குதியை பொருத்த‌வ‌ரை விடுத‌லை சிறுத்தைக‌ள் கட்சி தற்போது இரண்டு சட்டமன்ற தொகுதியேடு உள்ளது. மேற்கூறிய‌ க‌ட்சிக‌ள் அனைத்தும் இதுநாள் வ‌ரை த‌னி சின்ன‌த்தைப் பெற‌முடிய‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இக்க‌ட்சிக‌ளால் த‌லித் ம‌க்க‌ளின் 40 ச‌த‌ ஓட்டுக்க‌ளை கூட‌ பெற‌முடிய‌வில்லையே ஏன்?

சாதிய உட்பிரிவு, எண்ணற்ற குட்டி குட்டி கட்சிகள்/அமைப்புகள் ஆதலால் ஒன்றுசேர முடியவில்லை என சொண்ணால் உத்திரப்பிரதேசத்தில் எப்படி சாத்தியமானது? அட நாம் இங்கு ஆட்சி அமைக்க வேண்டாம் குறைந்தது தலித் வாக்குகளையாவது ஒன்றுசேர்களாமே! எது நம்மை தடுக்கிறது என சிந்திக்க வேண்டாமா?

தமிழகத்தில் உள்ள தலித் மக்களின் வளர்சியை பாதிப்பது நம்மில் படிந்துகிடக்கின்ற‌ பெரியாரிச மற்றும் மொழி இன வாத சிந்தனையே! த‌லித் ம‌க்களின் விடுத‌லையை உறுதி ப‌டுத்திய‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ர் புத்த‌ மத‌த்தில் இணையும் முன்பே த‌மிழ‌க‌ த‌லித்துக்க‌ள் இங்கு புத்த மத‌த்தையும் அதன் தத்துவத்தையும் போதிக்க துவங்கிவிட்டார்கள். ப‌ண்டித‌ர் அய்யோத்திதாச‌ரின் சிந்த‌னையை உள்வாங்கி ப‌குத்தறிவு ப‌ட்ட‌த்தை கூட்டிக் கொண்ட‌ பெரியாரை இங்கு த‌லித்துக்கள் எதிர்த்து கேள்வி கேட்ட‌தில்லை, இன்றுவ‌ரை அவ‌ரையே விடுத‌லையின் உறுவாக‌ பார்த்துவ‌ருகிறார்க‌ள். ஆனால் இந்திய‌ த‌லித் ம‌க்க‌ளின் விடுத‌லைக்கு பாடுப‌ட்ட‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ரையே வ‌ட‌நாட்ட‌வ‌ர் என்று க‌ருதும் சில‌ த‌லித் மொழி இன‌ வாதிக‌ள் தான் இங்கு த‌லித் விடுத‌லைக்கு பெறும் த‌டைக்கல்லாக‌ இருக்கிறார்க‌ள்.

தின‌க்கூலியை உய‌ர்த்திக் கேட்டதிற்க்கு 50 த‌லித் ம‌க்க‌ளை கூன்டோடு தீயிட்ட‌ இந்த‌ தமிழ் நாட்டில் த‌லித் விடுதலைகாக‌ பாடுப‌டாம‌ல் மொழி இன‌ வாதம் பேசுகின்ற‌ த‌லித் கூட்ட‌ம்தான் எரிகிற‌ சாதிய‌ தீயில் உண்மையிலேயே எண்ணையை ஊற்றுப‌வ‌ர்க‌ள்.

வாய்கிழிய‌ த‌னிஈழ‌ம் பேசிய‌ சீமான் இன்று செய‌ல‌லிதாவிட‌ம் த‌னி ஈழ‌ம் பெற்றுதாறுங்க‌ள் தாயே என‌ மண்டியிடுகிறார், காங்ர‌ஸ் கூட்டணியை எதிர்த்து பிர‌ச்சார‌ம் செய்கிறார், க‌ட‌ந்த‌ ஐந்தான்டுகால‌ம் த‌லித் விடுத‌லையை ஒதுக்கிவைத்துவிட்டு த‌னி ஈழ‌த்திற்க்காக‌ போராடி வ‌ரும் திருமாவை ஆத‌ரித்து ஏன் பிர‌ச்சார‌ம் செய்யவில்லை? இதே இந்த சீமான் கடந்த தேர்தலில் பா.ம.க வை ஆதரித்து பிர‌ச்சார‌ம் செய்தார் என்பதை நிணைவில் கொள்ளவேண்டும்.

முற்போக்கு சிந்தணைவாதி, பெரியாரிசம் என சொல்லிக்கொண்டு இவர்கள் தலித்துக்கள் காலைமட்டுமே வாருகிறார்கள் என்பாதை ஏன் த‌லித் மொழி இன‌ வாதிக‌ள் உண‌ர்வதில்லை? இந்த‌ சீமான் ஓர் உதாரண‌மே, இதுபோல் எண்ண‌ற்ற‌ சீமான்க‌ளும், பார‌தி ராசாக்க‌ளும் ப‌ல்வேறு வேட‌ங்க‌ளில் த‌லித் இன‌ ஒழிப்பை மைய‌ப்ப‌டுத்தி மொழி இன‌ வாதிக‌ள் என்ற‌ பெய‌ரில் இய‌ங்கி கொண்டிருக்கிறார்கள். தின்னிய‌த்தில் ம‌ல‌ம் தினித்த‌து இவ‌ர்க‌ளின் சாகோதர‌ர்கள் தான் என்ப‌தை ம‌ற‌ந்துவிட‌க்கூடாது.

கார்ல் மார்க்ஸின் பொதுவுட‌மை த‌த்துவ‌ம் இந்த‌ ம‌ண்ணிற்கேற்ற‌த‌ல்ல‌ என‌ விம‌ர்சித்து, த‌லித் ம‌க்க‌ளின் விடுத‌லையை ம‌ட்டுமே மைய‌ப்ப‌டுத்தி போராடிய‌ டாக்ட‌ர் அம்பேட்க‌ரின் எழுத்துக்க‌ளை உள்வாங்காத‌ எவ‌ரும் மொழி இன‌ வாத‌ சிந்த‌னையில் இருந்து விடுப‌ட‌ சாத்திய‌மில்லை. த‌லித் என்ற‌ முக‌த்தில் த‌மிழ‌ன் என்ற‌ முக‌மூடியயை அணிந்தால் முன்னேறிவிடாலாம் என்ற‌ எண்ண‌ம் சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து,கடைசி மனிதனின் விடுதலைக்காக‌ போராடாவேண்டிய‌வர்க‌ள் ஏசி காரைக‌ண்ட‌தும் முனைம‌ழுங்கி போவ‌து இய‌ல்பே! ஆனால் விடுத‌லை வேட்கை இருப்ப‌வ‌ர்களால் ம‌ட்டுமே தொடர்ந்து விடுத‌லைக்காக‌ பாடுப‌ட‌முடியும் என்பதே உல‌க‌ விடுத‌லை இய‌க்க‌ வர‌‌லாறு உணர்த்தும் பாடம்.
Readmore...
Wednesday, April 1, 2009

சர்வதேச சுகாதார ஆண்டு-2008

1 comments
 

2.10.2008 அன்று தமிழ்ஓசை நாளித‌ழில் மையப்‌ப‌குதி க‌ட்டுரையாக‌ வெளிவ‌ந்த‌து., by abraham Lingan .

ற்காலம் முதல் இக்காலம் வரை மானுட வாழ்க்கையை எண்ணற்ற கண்டுபிடிப்புகள் மான்படையச் செய்திருக்கின்றன. நெருப்பு, சக்கரம் நீராவி எஞ்சின் என பட்டியல் நீள்கிறது. முன்னோர்களின் கண்டுபிடிப்புக்களை மூலதனமாக கொண்டு நாள் தோறும் புதிய தொழில் நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. சுமார் 4500 ஆண்டு - களுக்கு முன்பே சுட்ட கற்களால் திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட கழிவறையை சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்தியதாக வரலாற்று அறிஞர்கள் கண்டறிந்த பின்பும் நம்மால் இதனை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை, கழிவறை பயன்படுத்துதல் என்பது திட்டமிடப்பட்ட நாகரீக வாழ்க்கையின் அடையாளம் மட்டுமல்ல இவை பகுத்தறிவின் குறியீடு.
I
உலகில் 41 சதவிகித மக்கள் சுகாதார வசதியின்றி வாழ்கிறார்கள், கழிவறை பயன்பாட்டை கனவில் கூட காண முடியாத அளவிற்கு முன் நாம் உலக நாடுகள் பொருளாதாரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன. பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமின்மை மற்றும் சுத்திகரிக்கப்படாத திடக் கழிவுகள் என நம்முடைய சுகாதாரப் பிரச்சனைகள் நீள்கிறது. நாளொன்றிற்க்கு சுமார் 4900 மனிதர்கள் சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்பதாக யூனிசெப் நிறுவனம் தெரிவிக்கின்றது இது ஒரு அணுகுண்டினால் ஏற்படும் அழிவிற்கு ஒப்பாகும். உலக சுகாதார நிறுவனத்தின் (றுர்ழு) அறிக்கையின் படி நாம் சுகாதாரத்திற்க்காக செலவிடும் ஒவ்வொரு டாலரும் குறைந்தது ஏழு டாலர் அளவிற்க்கு நமக்கு பொருளாதாரத்தை மிச்சப்படுத்து- வதாக கூறுகிறது. நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்ட நம் நாட்டில் சுகாதாரத் திட்டங்கள் பாராட்டுமளவிற்க்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, நாட்டின்; 33 சதவிகித மக்கள் மட்டுமே சுகாதார வசதி பெற்றுள்ளதாக மனித வள மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது.
I
இந்தியாவை பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே சுகாதாரத்தை பற்றி அக்கறையுடன் பேசப்பட்டது. ஏனெனில் காலரா, டயோரியா போன்ற நோய்கள் பீடித்து பிரிடிஷ் படைகள் உயிர்துரக்க நேரிட்டதை கருத்தில் கொண்டே லிட்டன் பிரபு (1876 - 80) ஆட்சிக் காலத்தில் முதல் சுகாதாரச் சட்டம் 1878-ல் கொண்டுவரப்பட்டது. வீட்டு கழிவறை, பொதுக் கழிப்பறை அமைப்பது பற்றி இச்சட்டம் வலியூறுத்தியது. இதுமட்டுமல்லாமல் கொல்கொத்தாவின் (அன்றைய தலை நகர்;) ஒவ்வொரு குடிசையிலும் கூட கழிவறைகள் கட்டப்பட வேண்டுமென கூறும் இச்சட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் இன்றும் கூட உணராமலிருப்பது மடமை.
I
1954ல் துவக்கப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மருத்துவ திட்டத்தின் கீழ் சுகாதார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு 1985 - 90ல் ஏற்படுத்தப்பட்ட ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகள், மற்றும் அங்கன்வாடிகளில் சுகாதார வசதி ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. மேலும் ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் (1997-2002) 20 சதவிகித குடும்பங்களுக்கு கழிப்பிட வசதி செய்துதரப்பட வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
I
குறிப்பாக 1999-ல் துவக்கப்பட்ட முழு சுகாதார திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சுமார் 12000 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் உலகின் மிகப் பெரிய சுகாதார திட்டமாகும். 1993ம் ஆண்டு இந்திய சுகாதார சட்டப்படி திறந்த வெளியில் மலம் கழித்தல் மற்றும் மனித கழிவுகளை மனிதனை அள்ளுதல் போன்றவை தடை செய்யப்பட்டன. ஆனால் இந்தியாவில் சுமார் 2 லட்சம் டன் மனித கழிவுகள் நாள்தோறும் திறந்த வெளியில் வெளியேற்றபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
I
இப்படி ஏற்படுத்தப்பட்ட பல சட்டங்களும் திட்டங்களும் முழமையான விளைவை ஏற்படுத்தவில்லை எனினும் ஓரளவேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதற்கு நாம் அனைவரும் பதில் சொல்ல கடமைபட்டவர்கள். ஏனெனில் சுகாதார திட்டங்களின் பின்னடைவிற்கு நமது பிற்போக்கான சில சமூக கலாச்சார சிந்தனையும் ஒரு காரணம்தான் என்பதை நாம் மறுக்க இயலாது. 2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக கிராமங்களில் 14.36 சதவிகித வீடுகளிலும், நகர்புறங்களில் 64.33 சதவிகித வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
I
உலகளவில் சுகாதாரமின்மையால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை கருத்தில் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதியில் 2008 -ம் ஆண்டை சர்வதேச சுகாதார ஆண்டாக அறிவித்தது. ஐ.நா வின் பொருளாதாரம் மற்றும் சமூக அலுவல் துறை உலகின் நீர் வளம் மற்றும் சுகாதாரத்திற்க்காக பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பின்வரும் 8 நோக்கங்களை மையப்படுத்தி பணியினை துவக்கியிருக்கிறது.சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.அரசு, ஐ.நா-வின் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உரிய திட்டத்தை செயல்முறைபடுத்துதல்.தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சுகாதார சட்டங்களை வலுப்படுத்தி புதிய திட்டங்களை நடைமுறைபடுத்துதல். சமூக பங்கேற்புடன் கூடிய பாரம்பரிய மற்றும் நீடித்து நிலைக்ககூடிய சுகாதார வசதிகளை ஊக்குவித்தல்.தேசிய அளவில் சுகாதார திட்டத்திற்க்கான நிதியை அதிகரித்தல்.கழிவுநிறை சுத்திகரித்து மறு பயன்பாட்டிற்கு வழிசெய்தல் மற்றும் ஆயிரமாவது ஆண்டு இலக்கை அடையும் வகையில் இத்துறை சார்ந்த மனித வள மேம்பாட்டு பயிற்சியளித்தல்.தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார திட்டத்தின் சமூக கலாச்சார மற்றும் தொழில் நுட்ப விளைவுகளை ஆராய்தல். சுற்று சூழல் மற்றும் இயற்கை வளங்களை காத்தல்.சுகாதாரம் குறித்த ஆதார பூர்வமான அறிவை மேம்படுத்தி இத்துறையின் முதலீட்டினை உயர்த்துதல் போன்றவையாகும்.
I
ஐக்கிய நாடுகள் சபையின் அறைக்கூவலை ஏற்று சுகாதார திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். நிதி பற்றாக்குறை, நிர்வாக பிரச்சனை, மக்களின் பங்களிப்பின்மை,திறமையற்ற நிர்வாகம் மற்றும் போதிய விழிப்புணர்வு இன்மை போன்ற எந்த காரணத்தையும் சொல்லாமல் கனினி மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளின் வளர்ச்சியை போல் தனிநபர் சுகாதாரத்தையும் உறுதிபடுத்த வேண்டியது அரசின் கடமை. இல்லையேல் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் கூட இந்தியாவில் அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்காது எனக் கூறிய உலக சுகாதார நிறுவனத்தின் (றுர்ழு) கூற்று உண்மையாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
Readmore...
Tuesday, March 31, 2009

கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?

0 comments
 


21.10.08 அன்று தமிழ்ஓசை நாளித‌ழில் மையப்‌ப‌குதி க‌ட்டுரையாக‌ வெளிவ‌ந்த‌து., by abraham Lingan .

ந்திரத்தை கூட மனிதனாக மாற்ற முயலுகின்ற இன்றைய விஞ்ஞானம் உண்மையில் மனிதனைத்தான் எந்திரமாய் மாற்றி வருகிறது. நாம் ரத்தமும், சதையும், உணர்வும் உறவுகளோடும் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையே இந்த அறிவியல் யுகம் சில நேரங்களில் நம்மை மரக்க செய்கிறது. 19 ம் நூற்றான்டின் இறுதியில் இங்கிலாந்தில் துவங்கிய தொழில்புரட்சி தற்போது மூன்றாம் உலக நாடுகளை மையம்கொண்டுள்ளதால் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இங்கு இயற்கை வளங்களைப் போட்டி போட்டுக் கொண்டு சுரண்டி வருகின்றன.நவீன தொழிற்கருவிகளை பயன்படுத்த வசதியில்லாத இந்தியா போண்ற நாடுகள் புதிய தொழில் தொடங்க ஏராளமான சலுகைகளை வழங்கி வருவதால் அன்னிய முதலீடுகள் குவிந்து வருகிறது. இப்படி தொழிற்சாலைகளின் முறையற்ற பராமரிப்பு மற்றும் கவனக்குறைவால் ஏண்ணற்ற பேரழிவுகள் இந்த் மண்ணில் நிகழ்ந்த வண்ணம் ஊள்ளன. 24 ஆண்டுகளுக்கு முன் போபால் நகரத்தில் நிகழ்ந்த விஷக் கசிவால் சுமார் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மனித உயிர் காற்றில் கறைந்து போனது. ஆனால் இத்தனையாண்டுகளாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் கூட முழு நிவாரணம் வழங்கப்படவில்லை. ஓர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காட்டுயிர்களை சட்ட விரோதமாக வேட்டையாடிய நடிகர்கள் சிலறை கம்பி எண்ண வைத்த நமது சட்டம் போபாரில் விஷக்கசிவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கிறது.


உலக நாடுகள் இராசயனக் கழிவுகளை முறையாகக் கட்டுப்படுத்த தவறி விட்டதின் விளைவாய் ஈன்று இழ்க்கடலில் வசிக்கும் திமிங்கிலம் முதல் போலார் கரடிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக இய்வுகள் கூறுகின்றன. 100 மெகாவிட் மின்சாரத்தை ஊற்பத்தி செய்யும் ஆனல் மின் நிலையம் இண்டொண்டிற்க்கு 10 கிலோ ஆளவுடைய பாதரசத்தை உற்பத்தி செய்கிறதாம்,ஓரு மேசைக்கரண்டி ஆளவிலான பாதரசம் சுமார் 25 ஏக்கர் பரப்புடைய நீர் நிலைகளை பாழ்படுத்தும் திறன் கொண்டதென இய்வறிக்கை கூறுகிறது. எத்தகைய ஏண்ணற்ற கேடுகளை விளைவிக்கும் தொழிற்சாலைகள் நம்மில் ஏத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது ஏன்பதை சற்று கவனத்தோடு பார்க்க வேண்டும்.


இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு விரைவாக வளரத்துவங்கிய இரசாயனத் தொழிற்சாலைகள் இன்று ஆழுகு பொருள்கள், பிளாஸ்டிக் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஏன கிட்டத்தட்ட ஏழாயிரத்திற்க்கும் மேற்பட்ட இரசாயனப் பொருட்களை ஊற்பத்தி செய்கிறது. நம் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்கள் இரசாயனக் தொழிற்ச்சாலைகளால் படுமோசமாக பாதிப்படைந்தள்ளன, குறிப்பாக தமிழ் நாட்டில் மேட்டூர், கடலூர், இந்திரப் பிரதேசத்தில் வாராங்கள், படஞ்சேரி, கேரளத்தில் உலூர் மற்றும் குஒராத்திலுள்ள வாஅபி, ஆங்லேஷ்வர் போன்ற நகரங்களில் மட்டும் சுமார் ஓரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் ஆபாயகரமான இரசாயனக் கழிவுகளால் பாதிக்கபட்டுள்ளனர். இவற்றுள் கடலூரில் இரசாயனத் தொழிற்சாலைகளின் ஏண்ணிக்கையும், பாதிப்பும் கூடிய வண்ணமே ஊள்ளது.


தமிழகத்தில் சிறிய, நடுத்தர மற்றும் பெரும் தொழிற்சாலைகளை எக்கவிக்கும் பொருட்டு தமிழக ஆரசு கடந்த 1972 இம் இண்டு மாநில தொழில் வளர்ச்சி கழகத்தை (நஒடஈஞப) துவங்கியது. தற்போது கடலூர் ஊட்பட 14 இடங்களில் ஈத்தகைய தொழிற் பேட்டைகள் இயங்கி வருகிறது. 1982 ம் இண்டு துவங்கப்பட்ட கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகம் தற்போது 28 ற்கும் மேற்பட்ட தொழிற்- சாலைகளுடன் இரண்டு பகுதியாக சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.


இத் தொழிற்சாலைகளில் ஆடிக்கடி நிகழும் சிறிய மற்றும் பெரிய ஆளவிலான விபத்துக்கள், சுத்திகரிக்கப்படாத விபத்தை விளைவிக்க கூடிய கழிவுகளை இற்றிலும் கடலிலும் கலப்பதால் எற்படும் பாதிப்புகள் இவை மட்டும் இன்றி இத்தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் காதைக் கிழிக்கும் சத்தத்தையும், மூக்கைத் துளைக்கும் நாற்றத்- தையும் ஏதிர்த்து ஈப்பகுதி மக்கள் கடந்த 20 இண்டுகளாய் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியவண்ணம் ஊள்ளார்கள்.


சென்னை உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி திரு. கனகராஜ் ஆவர்கள் தலைமையில் நான்கு ஊறுப்பினர் ஆடங்கிய ஈந்திய மக்களின் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித ஊரிமைகளுக்கான தீர்வாணயம் கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளை இய்வு செய்து 2003ம் விரிவான ஆறிக்கையொன்றை சமர்பித்தனர். 49 பக்கம் கொண்ட ஈவ்வரிக்கை பின்வரும் நான்கு முக்கிய பரிந்துரைகளை முன் வைக்கிறது.
1. சிப்காட் வளாகம் இரண்டில் மாசு ஐற்படுத்தக் கூடிய தொழிற்ச்சாலைகளை ஆனுமதிக்க கூடாது. மேலும் ஈங்கு ஆமைக்கப்படும் தொழிற்ச்சாலைகள் நிலமிழந்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
2. தொழிற்ச்சாலைகள் மாசு கட்டுப்பாடு செய்வதை விட மாசு ஐற்படாத வண்ணம் ஊற்பத்தி செய்யும் திட்டங்களை வகுக்க வேண்டும்.
3. மத்திய ஆரசு இபத்தை விளைவிக்க கூடிய தொழிற்சாலைகளை மக்கள் வசிக்கும் பகுதியல் நிறுவக் கூடாது.
4. தமிழக ஆரசு கடற்கறைப் பகுதிவாழ் மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்க்கான நீரை பாதுகாக்கும் வகையில் கடற்கரையோர தொழிற்ச்சாலைகள் இழ்குழாய் மூலம் நிலத்தடி நீரை ஊறிஞ்சுவது தடைசெய்யப்படவேண்டும். மேலும் இப்பகுதி நிலத்தடி நீரை இய்வு செய்து ஆதன் தரத்தை ஊறுதிபடுத்த வேண்டுமென ஈக்குழ மத்திய மாநில ஆரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.


மேலும் இத்தொழிற்சாலை வளாகத்தில் சேகரிக்கப்பட்ட காற்றை இய்வு செய்ததில் பென்சின், கார்பன் டெட்ரா குளோரைடு மற்றும் குளோரோபார்ம் ஊட்பட சுமார் 22 வகையான இராசயனங்கள் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் பென்சின் ஆங்கிகரிக்கபட்ட ஆளவை விட 125 மடங்கு கூடுதலாக உள்ளதா- கவும் இதனால் குழந்தைகளுக்கு இரத்த புற்றுநோய் உண்டாகும் ஏன தேசிய சுற்றுசூழல் பொறியியல் இராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.


ஆடிப்படை மனித ஊரிமை மீரல், சுற்றுப்புற சூழல் பாதிப்பு, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை இற்றிலும் கடலிலும் கலத்தல் ஏன ஏண்ணற்ற சட்ட விதிமுறைகளை மீறி ஈயங்கிவரும் ஈத்தகைய தொழிற்ச்சாலைகள் 1984ம் இண்டு போபாலில் நிகழ்ந்த விஷக்கசிவை நினைவூட்டுவதாக போபால் நீதிக்கான சர்வதேச பிரச்சார ஈயக்கத்தின் தலைவர் திரு. சந்திரநாத் சாரங்கி ஆவர்கள் கூறுகிறார்.
இன்நிலையி இப்பகுதி மக்களின் வாழ்ஊரிமைக் குரலுக்கு செவிமடுக்காத மத்திய மாநில ஆரசுகள் பல புதிய தொழிற்ச்சாலைகளுக்கு ஆனுமதி கொடுத்த வண்ணம் ஊள்ளக். கடலூர் சிப்காட் வளாகத்தின் மூன்றாவது பகுதியை விரிவுபடுத்த தற்போது நிலம் கையகப்படுத்தும் படலம் நடந்து வருகிறது, ஈஞ்; பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடி மூதலீட்டில் மிகப் பெரும் தொழிற்சாலைகள் வரவிருக்கின்றன. ஆவற்றுள் 4750 கோடி மூதலீட்டில் டாடாவின் நாகர்ஜøனா எண்ணை சுத்திகரிப்பு நிலையம், 1320 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆனல் மின் நிலையம், 450 கோடி முதலீட்டில் ஜவுலிட் பூங்கா மற்றும் புதிய துறைமுகம் என முதலீடுகள் குவிந்து வரும் நிலையில் இவ‌றிற்கெல்லாம் மேலாக சுமார் 16 ஆயிரம் கோடி முதலீட்டில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆனல் மின் நிலையம் கடலூரிலும் மரக்காணத்திலும் ஆமையவிருக்கிறது. இப்படி துவங்க இருக்கும் பல்வேறு புதிய தொழிற்ச்சாலைகளால் சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தம் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். தாங்கள் இதுவரை ஆனுபவித்து வந்த நிலங்களையும், வளங்களையும் விட்டு பிரிகின்ற இம் மக்களின் ஏதிர்காலத்திற்கு ஆரசு ஏன்ன திட்டத்தை முன்வைக்கிறது? கடலையும், இற்றையும், நிலத்தையும் நம்பியிருக்கும் ஈம்மக்களின் வாழ்வாதாரத்தை தட்டிப்பரிப்பது மனித நேயமற்ற செயலல்லவா?
வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயர்வான் ஏனும் ஓளவையின் வாக்கிற்க்கு ஏதிராக வனத்தையும், வயலையும், நதியையும் ஆழித்து தொழிற்ச்சாலைகள் ஆமைத்தால் முன்னேறிவிடலாம் ஏன ஏண்ணுவது மூட நம்பிக்கை. கண்களை விற்று சித்திரம் வாங்கும் இந்த கதையின் முடிவு ஆரசின் கையில்தான் இருக்கிறது, ஆனால் ஆரசோ மக்களின் கையிலல்லவா இருக்கிறது.

Readmore...

இய‌ற்க்கை பேரிட‌ர் மேலாண்மையின் விளைவு?

0 comments
 

27.3.09 அன்று தமிழ்ஓசை நாளித‌ழில் மைய‌ப்ப‌குதி க‌ட்டுரையாக‌ வெளிவ‌ந்த‌து., by abraham Lingan

ருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” என்ற வள்ளுவரின் வாக்கு ஒரு நாட்டின் சூழியல் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது அந் நாட்டு மக்களின் வாழ்வியல் பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது. இயற்கை வளநகளை நம்பியே பெரும்பான்மையான மக்கள் வாழ்கை நடத்தும் நம் நாட்டில் ஒருபுறம் விவசாயத்திற்க்காக நதிநீரை சிறைபிடிக்க அணைகள் அமைப்பதும் இறுபுறம் விளைநிலநகளை கூறுபோட்டு மணைகள் அமைப்பது என முன்னுக்குப்பின் முறனாக செல்லும் வளர்சிப்பாயால் குறுகிப்போனது நடைபாதையும், நதிபாதைகளும் மட்டுமல்ல மனிதனின் மனமும் குனமும் தான்.இயற்கையை தாம் விரும் -பியவாறு மாற்றியமைக்கும் மனிதனுக்கு அது கற்றுத்தரும் பாடமே இயற்கைச் சீற்றங்களாகும்.

நவீன அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பங்களின் உதவியால் வளர்ந்த நாடுகள் இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்பை வெகுவாக குறைத்து விடுகின்றன. ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் நிலமைதான் மிகவும் பரிதாபமானது. இயற்கை சீற்றங்கள் மனித சக்திக்கு அப்பார்பட்டவை என்றாலும் நம்முடைய தொலைநோக்கு பார்வையின்மைஅந்; இது போன்ற நிகழ்விற்கு ஓர் காரணமாகிவிடுகிறது இதுமட்டும்மல்லாமல். மக்கள் கைப்பெருக்கம் மற்றும் நகர் மயமாதல் 2.வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் ஏழ்மை 3.சுற்றுப்புரசூழல் சீர்கேடு 4.அரசின் முறையற்ற செயல்பாடு போன்ற பல்வேறு காரணங்கள் பேரழிவினை அதிகப்படுத்துகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியான உலக வங்கியின் அறிக்கையின் படி அறுபது சதவிகித ஆசிய மற்றும் ஐம்பது சதவிகித ஆப்பிரிக்க மக்கள் மிகவும் ஆபத்தான பேரிடர் நிகழக்கூடிய இடங்களில் வசிப்பதாக தெறிவிக்கின்றது. இப்பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்த பேரழிவுகளை கணக்கிட்டால் உலக வங்கியின் இக்கூற்றின் உண்மை புலப்படும்.

1994 முதல் 2003ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் உலகில் நிகழ்ந்த சுமார் 6185 பேரழிவுகளில் 947 தென்னாசியாவிலும், பசுபிக் மற்றும் கிழக்காசியாவில் சுமார் பேரழிவுகளும் நிகழ்ந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலகில் கடந்த ஆண்டு (2008) மட்டும் நிகழந்த 321 பேரழிவுகளில் 235,816 மக்கள் உயிரிழந்துள்ளார்கள், மேலும் 181 பில்யன் டாலர் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த 2000 முதல் 2007ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிர் இழப்பு மூன்று மடங்காகவும், பொருளாதார இழப்பு இரண்டு மடங்காகவும் உயர்ந்திருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்புக்கான சர்வதேச அமைப்பு (மசஐநஈத)1 கூறுகிறது.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல, நாட்டின் 60 சதவிகித நிலப்பறப்பு நில நடுக்கத்தாலும், 40 மில்யன் ஹெக்டேர் விவசாய நிலம் வெள்ளத்தாலும், சுமார் 8000 கிலோமீட்டர் ங்டள்ஓள்;ள் கடற்கறை ஞ்ஊத்ல் புயலாலும் மற்றும் 68 சதவிகித பகுதி வரட்சியாலும் பாதிக்கப்படக் கூடியவை என இந்திய அரசு கூறுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் இந்தியா சுமார் 300க்கும் மேற்பட்ட பேரழிவுகளை சந்தித்துள்ளது. 1990 முதல் 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 198 முறை வெள்ளத்தாலும், 141 முறை புயலாலும், 11 முறை கடும் வறட்சியாலும், 41 முறை மிதமிஞ்சிய வெப்பத்தாலும் நம் நாடு பாதிப்படைந்துள்ளது. இதனால் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துபோனார்கள். மேலும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 1990 முதல் 2005 வரையிலான கால கட்டத்தில் நடந்த் ஏழு மிகப்பொரிய நிலநடுக்கத்தில் 25 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் உலகையே துயரத்தில் ஆழ்த்திய ஆழிப் பேரலையில் சிக்கி இழந்தோர் பத்தாயிரத்திற்கும் அதிகம்.

இது போன்று உலகில் நிகழும் பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை 1990 முதல் 1999 வரையிலான காலகட்டத்தை சர்வதேச இயற்கை பேரிடர் குறைக்கும் பத்து ஆண்டுகள் என அறிவித்து பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் பேரிடர் குறித்து உலகநாடுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 2005ல் ஜப்பானிலுள்ள ’யூகோ நகரில் நடைபெற்ற உலக பேரிடர் குறைப்பு மாநாட்டில் 2005 முதல் 2015ம் ஆண்டிற்கான செயல் திட்டத்தை வடிவமைத்தது, இதனை இந்தியா உட்பட சுமார் 168க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கையொப்பமிட்டிருக்கின்றன ஹி யூகோ செயல்திட்டம் என இச் செயல்திட்டம் பின்வரும் ஐந்து முக்கிய நோக்கத்தை வயுறுத்துகிறது. 1.சிறந்தநிறுவன கட்டமைப்பினை ஏற்படுத்தி தேசிய மற்றும் கிராமப்புற அளவில் பேரிடர் இன்னல் குறைப்பினை நடைமுறைப்படுத்துதல் 2.பேரிடர் நிகழ்வுகளை கண்டறிந்து அதன் தாக்கத்தினை அளவிட்டு தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்தல் மற்றும் தகுந்த முன்னெச்சரிக்கை (உஹழ்ப்ஹ் ரஹழ்ய்ண்ய்ஞ்) கருவிகளை நிறுவி அதனை தொடர்ந்து செயல்படுத்துதல். 3.கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொது அறிவினை பயன்படுத்தி ஒர் பாதுகாப்பான கலாச்சாரத்தை உருவாக்குவதன் மூலம் எல்லா நிலைகளிலும் பேரிடர் இன்னல் குறைப்பு செய்தல். 4.பேரிடரால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியின் இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல், மற்றும் 5.பேரிடர் தடுப்பு செயல்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் இது குறித்த தாக்கத்தினை ஏற்படுத்துதல் என இச் செயல் திட்டம் நீன்ட கால வளர்ச்சியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை மத்திய உள்துறை அமைச்சகமே இயற்கைப் பேரழிவிற்க்கான தலைமைப் பொருப்பாளராகும் மேலும் வரட்சி, மழை வெள்ளம் போன்றவற்றை விவசாயத்துறைக் கவனித்துக் கொள்கிறது. அனைத்து பேரிடர் மேலான்மை திட்டங்களை அந்த மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்தே செயல்படுத்துகின்றன, எனினும் ஏதாவது பேரழிவு நிகழந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசின் உடனடி பாதுகாப்பு மற்றம் நிவாரணம் வழங்க வேண்டும். பேரிடர் காலங்களில் மாநில அரசு கிழ்கண்ட முக்கிய பணியினை செய்தல் வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்துகின்றது. 1.பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக வேறொரு இடத்திற்கு அழைத்து செல்லுதல் 2.நிவாரண மையம் அமைத்தல். 3.அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் 4.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் 5.சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென பேரிடர் மேலாண்மைச் சட்டம் 20053 கூறுகிறது.

பேரிடர் மேளாண்மைத் திட்டத்தை இந்திய அரசு பல்வேறு உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது, பேரிடர் காலங்களில் பரஸ்பர உதவி மற்றும் ஒருங்கிணைப்பிற்கு சுவீடன் மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் பேரிடர் உதவி மற்றும் ஒறுங்கிணைப்பு (மசஈஅஇ) குழுவில் உறுப்பினராகவும். மேலும் ஆசிய பேரிடர் குறைப்பு மையம் (அஈதஇ) க்கு நிதி உதவியும் அளித்து உதவுகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எல்லா நிலைகளிலும் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு வகையில் மத்திய அரசு பேரிடருக்கான நிதியை மாநில அரசுக்கு அளித்து உதவுகிறது. அவற்றுள் பேரிடர் நிவாரண நிதி (இதஊ)யில் 75 சதவிகிதம் மத்திய அரசும் 25 சதவிகிதம் மாநில அரசும் ம்ள்ல்ச்;ச்ல்ஜ்ஒ. மேலும் தேசிய பேரிடர் உதவி நிதி (சஇஇஊ) என்ஞ்ஒ பேரிடர் நிகழ்ந்த இடத்தை மத்திய அரசின் உயர்மட்ட குழு பார்வையிட்டு சேதத்தை மதிப்பிட்டு மத்திய அரசுக்கு நிவாரணத் தொகையை பரிந்துறை செய்வதன் அடிப்படையில் இந்த நிதி மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது.

இப்படி மத்திய மாநில அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு அதிகறித்துக் கொண்டேதான் போகிறது. குறிப்பாக பேரிடர் காலங்க- ளில் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். இதனை கருத்தில் கொண்டே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மைக் கல்வியை சேர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறது.

பல்வேறு பள்ளி கல்வி அமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் சுமார் 1,124,0334 பள்ளிகள் உள்ளதாகவும் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கு பள்ளி மாணவர்கள்ளாகும்,ஆகையால் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை கல்வியை அளிப்பதன் மூலம் எதிர்வரும் காலங்களில் பேரழிவின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு, பேரழிவு குறித்த விழிப்புணர்வு குழந்தைகளின் மூலம் பெற்றோர்களுக்கும் சென்றடைய வாய்ப்பிருக்கிறது. இதன் முதற்படியாக மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் (இஆநஉ) பேரிடர் மேலாண்மைக் கல்வி சேர்க்கப்பட்டு கற்பிக்கப்பட்டும் வருகிறது. இதனைக் தொடர்ந்து தமிழ்நாடு, ஒரிசா, மஹராஷ்ட்ரா, பிகார், குஜராத், மேற்குவங்கம் மற்றும் ஜார்கன்ட் போன்ற மாநிலங்களும் பேரிடர் மேலாண்மைக் கல்வியை நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஆண்டுதோறும் தெற்காசிய பிரபந்தியத்தின் உள்நாட்டு உற்பத்தி (எஈட)யில் இரண்டு முதல் ஆறு சதம் வரை பேரழிவுகளால் பாதிப்படைகிறதென்றும், இதே நிலை நீடித்தால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அடுத்த ஆண்டில் (2010) சுமார் 13 சதம் வரை பாதிக்கப்படுமென ஆக்ஸ்பாம் (ஞஷ்ச்ஹம்)நிறுவனம் தெரிவிக்கின்றது. தெற்காசியாவில் நிகழும் பெரும்பான்மையான இயற்கை பேரழிவுகள் பருவ நிலை மாற்றத்தினால் (இப்ண்ம்ஹற்ங் இட்ஹய்ஞ்ங்) நிகழ்கின்றன, இதற்கு வளர்ந்த நாடுகளும் பொறுப்பாகும். பெருகிவரும் சுற்றுப்புற சுழல் சீர்கேடுகளால் கூடிக் கொண்டே போகும் வெப்பநிலை சுமார் இரண்டு ஹெல்சியஸ் அளவிற்கு உயர்ந்தாலும் கூட கடற் கறையோரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலத்தடிநீரில் கடல்நீர் உட்புகுதல் போன்ற பிரச்சனைகள் பெருகிவிடும் அகையால் கரியமில வாயுவை அளவிற்கு அதிகம் வெளியிடும், அமெரிக்கா போண்ற வளர்ந்த நாடுகளை கட்டுப்படுத்த தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பைச்(சார்க்) சார்ந்த நாடுகள் ஐநா சபையிடம் முறையிட வேண்டும்.

ஆண்டுதோறும் வெள்ளம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என வழங்குவதைத் தவிர்த்து பிரச்சனைக்குள்ளாகும் பகுதிக்கு ஏற்றார்போல் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். இதுபோலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதன் மூலமே இழப்பை ஓரளவேனும் ஈடுசெய்ய முடியும். எல்லை தாண்டிய தீவிரவாதம், விபத்து மற்றும் உள்நாட்டு பிரச்சனை போன்றவற்றினால் ஏற்படும் உயிரழப்பை விட இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்பு பலமடங்கு அதிகம் என்பதை கருத்தில் கொண்டு இராணுவம் மற்றும் காவல் துறையைச் சார்ந்த அனைத்து பிறிவினறுக்கும் பல்வேறு இயற்கைப் பேரழிவின்போது மீட்பு பணி செய்ய உரிய பயிற்சி மற்றும் அதற்குறிய நவீன வசதிகளை ஏற்படுத்துவதன்மூலம் பெரும் உயிரிழப்பை குறைக்க முடியும். மேலும் பல்லாயிரக்கணக்கான கோடிரூபாய் செலவிடப்படும் இத்துறைக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த மத்திய மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பநகேற்புடன் கூடிய செயல் திட்டங்களை வகுப்பதோடு பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் என்.எஸ்.எஸ் போன்ற பல்வேறு தன்னாற்வ தொண்டு அமைப்புகளுக்கும் ஆசிரியர்களும் பேரிடர் மேலாண்மை பயிற்சியை தீவிரமாய் பயிற்றுவிக்க வேண்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் வருகின்ற போதெல்லாம் கைவிரல் மை வைக்க காத்துக்கிடக்கின்ற கடைகோடி மக்களின் குறைந்தபட்ட சமூக பாதுகாப்பினை (ஙண்ய்ண்ம்ன்ம் நர்ஸ்ரீண்ஹப் நங்ஸ்ரீன்ழ்ண்ற்ஹ்) உறுதிப்படுத்தினால் தான் நிவாரணத்திற்காக சாலையில் அமரும் கூட்டத்தையும் கிடைத்த நிவாரணத் தொகையை பெறச் செல்லுகையில் நெரிசல் சிக்கி இறந்து போவோரின் எண்ணிக்கையும் குறைக்க முடியும். இல்லையேல் ஆட்சிக் கட்டிலும், அதிகார நாற்களிகலும் கூட ஜனனாயகம் என்ற நில நடுக்கத்தால் கவிழ்ந்து போவதற்கு வாய்பிருக்கிறது.
References:
1.PRESS RELEASE on 22 January 2009, United Nations International Strategy for Disaster Reduction (UNISDR).
2.Report on Implementation Of The Hyogo Framework for Action: Asia, 25 May 2007, UNISDR.
3.Disaster Management Act 2005, Ministry of Law and Justice, December, 2005. 4.Disaster Education in India –A Status report, March 2008, Sustainable Environment and Ecological Development Society, New Delhi.
5.Rethinking Disasters, Oxfam International 2008.
Readmore...

கட்டணமில்லா தொலைபேசி

0 comments
 


News Source & Labels: ,
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்சென்னை, நவ. 16: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை இலவசமாக போனில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான கட்டணமில்லா தொலைபேசியை எண் 1056-ஐ தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் ஆகியவை தகவல் தொடர்புகளால் இணைந்த "மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்கள்' தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட உள்ளன.இந்த மையங்கள் மூலமாகக் கர்ப்பிணிப் பெண்கள், விபத்தில் சிக்கியோர், பிற அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருக்கான முதலுதவி மருந்துகளையும், பிற மருத்துவ சாதனங்களையும் கொண்ட ஆம்புலன்ஸ் வாகன வசதி, ரத்தம் வழங்கும் தகவல், தேவைப்படும் சிகிச்சைக்கு ஏற்ப உடனடியாகச் செல்ல வேண்டிய மருத்துவமனை பற்றிய தகவல்கள் ஆகியவை மக்களுக்கு உடனுக்குடன் அளிக்கப்பட உள்ளன.மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்களைப் மக்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல் மூன்று அல்லது நான்கு இலக்க இலவசத் தொலைபேசி எண்ணை ஒதுக்க கடந்த 27-ம் தேதி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.இந்தக் கோரிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்று, தமிழகத்தில் நிறுவப்பட உள்ள மருத்துவக் கட்டுப்பாட்டு அவசரச் சேவை மையங்களைத் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி தொடர்பு எண்ணை ஒதுக்கீடு செய்துள்ளது.செய்தி: தினமணி

Readmore...
Saturday, March 28, 2009

தேர்த‌ல் 2009.....

1 comments
 
நாங்கள் இல்லையேல்
அறுவடையுமில்லை!
அரசியலுமில்லை!!

எங்க‌ளை
வாக்கு வங்கிகளாக பயன்படுத்த‍‍ ‍‍_ நீங்க‌ள்
வெட்க‌ப‌டுவ‌தில்லை!

உங்கள்
வேட்டியின் கறைகள் ‍_எங்கள்
வேர்வையாலும் ர‌த்தத்தாலுமான‌தென‌
உணறுகின்றபோது

உங்கள் போலி
அரசிய‌லும்
வர‌லாறும்

புதைக்க‌ப்ப‌டும்.

உண்மை எங்க‌ளால் ம‌ட்டுமே
விதைக்க‌ப்ப‌டும்.
Readmore...