Pages

Banner 468

Subscribe
Wednesday, October 20, 2010

கலர் டி.வி மற்றும் பன்றி காய்ச்ல் இங்கு இலவசம்:

2 comments
 
"பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு, தடுப்பூசி இலவசம்' என, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்தார், ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தமிஃப்ளு மற்றும் ரெலேன்சா ஆகிய இரண்டு எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன, இவை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கிடைக்கும் என்று அறிவித்தார்கள்.

சரி, ஓர் தடுப்பூசி போட்டுக் கொள்ளளாமே என்று கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றேன், அங்கு தனி பிரிவு அமைத்து  ஓர் கந்து வட்டி காரன்போல் வசூல் நடத்துகிறார்கள். பெயர் மற்றும் முகவரியை குறித்துக்கொண்ட அவர்கள் ரூ.235 பனம் கேட்டார்கள், பின்பு ஓர் ஊசியைப் போட்டு ஜந்துநிடமாக சில்லரைக்கு அலையவிட்டார்கள்.

ரூ.235க்கு நான் ரசீது கேட்க, அதெல்லாம் கிடையாது அப்படி கொடுக்க அரசு எங்களுக்கு உத்தரவிடவில்லை என்றார்கள், ஓர் குண்டூசி வாங்கினால் கூட அதற்க்கு பில் தரவேண்டிய  நிலையில், என்னிடம் 235ஜ வாங்கிக்கொண்டு பில் இல்லை என்று சர்வ சார்வசாதாரனமாக சொல்கிறார்கள் இந்த பொருப்புள்ள அரசு பணியாளர்கள்.


மருத்துவ மனையில் பணியாற்றும் ஓர் நன்பரை சந்திக்கையில், அரசு பொது மருத்துவமனையில் நடக்கும் அவலத்தை விவறித்தார், 20 லட்சம் மதிப்புள்ள‌ சலவை எந்திரம் வந்து 4 மாதமாகியும் இன்னும் அது பொருத்தப்படவில்லை, பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்வது என பலவற்றை வருதத்துடன் பகிற்ந்துகொண்டார்.

ஓரு ரூபாய் அரிசி, இலவச கலர்டிவி என பல்வேறு இலவசங்களை வழங்கும் இந்த அரசு ஏன் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலவசமாக வழங்க மறுக்கிறது, முதல்வர் விரைவில் இலவச தடுப்பூசி போடப்படும் என தெறிவித்து 50 நாட்கள் ஆகியும் கூட இன்றுவரை ஏன் அது நடைமுறைப் படுத்த‌வில்லை என்பது முதல்வருக்கே வெளிச்சம்.

இவற்றை கேட்க யாரும் முன்வராதது, மக்கள் மக்களாட்சியில் நம்பிக்கை இழந்துவிட்டதை காட்டுகிறது. கேட்க வேண்டிய எதிர் கட்சிகள் ஆர்பாட்ட அரசியலோடு ஓய்ந்து போகின்றன, ஆட்சியை வழிநடத்துவதில் எதிர் கட்சியின் பங்கே மிக அவசியமானது என்பதை மக்களும் புறிந்துகொள்ளவில்லை, மற்ற கட்சிகளும் புறிந்துகொள்ளவில்லை.
Readmore...
Friday, October 15, 2010

அறிஞர் அப்துல் கலாமும், கலைஞர் கருணாநிதியும்

4 comments
 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்றைய தினத்தை (அக்டோபர் 15) ஐக்கிய நாடுகள் சபை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது என்பது இந்தியார் அனைவருக்கும் கிடைத்த பெருமை, குறிப்பாக தமிழர்களான நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் தமிழில் சிறந்த புலமைபெற்ற உலகம் போற்றும் இந்த தமிழனை உலக செம்மொழி மாநாட்டிற்க்கு அழக்கப்படவில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே.


நாடு போற்றும் தமிழனை, நாம் சுயநலத்திற்க்காக பயன்படுத்தும் மாநாட்டு மேடையில் ஏற்றி அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்ல என்னத்தால் கலைஞர் கருணாநிதி அதை செய்திருக்கலாம் என தோண்றுகிறது.

சரி அரசியல் மூதறிஞ்சர் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஐ.நா சபை எந்த நாளாக கொண்டாட நினைக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே!

தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் கல்வி கற்று நாட்டின் தலை சிறந்த அணுவியல் அறிஞராகவும், தொலைநோக்கு சிந்தனையாளராகவும் திகழும் அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றினார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரி தலைவராக திகழும் அப்துல் காலம் உலகம் முழுவதும் இதுவரை 1 கோடி மாணவர்களை சந்தித்து உரையாற்றிவுள்ளார்.


மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும், நாட்டுக்கு எவ்வகையில் கடமையாற்ற வேண்டும் என்று தொடந்து திட்டங்களை வகுத்து, விளக்கம் கொடுத்து, எளிமையாக உரையாடி ஊக்கப்படுத்தி வரும் அப்துல் கலாம் போற்றப்படும் உலகத் தலைவர்கள் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் அவரின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ள ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் இந்த நாளை மாணவர் தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அங்கீகாரம் இந்தியாவின் தலைவர் ஒருவருக்கு இதுவரை கிடைக்காத ஒரு சர்வதேச ஒரு சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore...