Pages

Banner 468

Subscribe
Tuesday, September 21, 2010

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவும் கருணாநிதியின் பகுத்தறிவும்.

0 comments
 
சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்த போது இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழாவை தமிழக அரசு சில நல்ல? கலைநிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட இருகிறது, பார்பனர்களின் யோசனைபடி வெற்றி சின்னமாக நிர்மானிக்கப்பட்ட இ...க்கோயிலில் பல்லாயிரம் தேவ தாசிகளின் நாட்டிய ஒலியும் நடன அசைவுகளுக் புதைந்து கிடக்கிறது, அடிமைப்படுத்தப்பட்ட தொல்குடி தொழிலாளர்கள் சிந்திய வியர்வையும், தேவ தாசிகளின் காற்சலங்கை கீறி கொட்டிய இரத்த கறையின் மேலும் நடக்கும் இவ் விழாவில் இக்கொயிலினுள் பரத நாட்டியம் நடத்தலாம், ஆணால் பறையாட்டம் கூடாது என உத்தவிட்ட திராவிட மணி கலைஞர் கருணாநிதியின் பகுத்தறிவை எண்ணுகையில் புல்லறிக்கிறது.போகிற போக்கை பார்த்தால் திமுக வரலாற்றின் கடைசிமுதல்வர் தான்(கருணாநிதி) தான் என்னபதை நிருபித்து விடுவார் போலிருக்கே!
Readmore...
Friday, September 10, 2010

அன்று போபர்ஸ் பீரங்கி, நேற்று ஸ்பெக்ரம் இன்று காமன்வெல்த் போட்டி ஊழல்- தொடறும் காங்ரஸின் சாதனைகள்.

1 comments
 
போபர்ஸ் பீரங்கி மற்றும் ஸ்பெக்ரம் ஆகியவற்றுக்கு சற்றும் குறைவில்லாமல் தற்போது காமன்வெல்த் போட்டி ஊழல் சோனியா தயவில் சிறப்பாக‌ நடந்துவருகிறது. மேற்கூறிய அனைத்து முறைகேடுகளும் காங்ரஸ் ஆட்சியின் தான் நடந்தது என்பது கவணிக்கத்தக்கது.

காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே அதிக செலவு செய்தது இந்தியாதான். முதலில் 617.5 கோடி என்றார்கள், அப்புறம் 1895.3 கோடி அப்புறம் 7000 கோடி என்றார்கள். இப்போதைய நிலவரப்படி 65500 கோடி செலவாகுமாம். காமன்வெல்த் போட்டி 2014 ல் நடத்தப்போகும் ஸ்காட்லான்ட் திட்டமிட்டுள்ளது மொத்தமே 3749 கோடிகள்.

காமன்வெல்த் ஏற்பாடு முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதில் தொடர்புடைவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். போட்டி முடிந்த பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய பிரதமர் அமைச்சரவை குழுவை நியமித்துள்ளார் என்று மட்டும் கூறிவிட்டு காங்ரஸ் தலைவர் சோனியா காந்தி முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படுவது நாகரீகமற்ற அரசியல்.

மணிஷங்கர் ஐயர் பெரிய அளவில் துவக்கிய இந்த பிறச்சனை பாராளுமன்ற இருஅவைகளையும் சில நாட்கள் முடக்கியதேடு தற்போது முடங்கி கிடக்கிறது, அதுமட்டுமல்லாமல் காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்குத் தொடர்பு உள்ளது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமியும் கூறியுள்ளார். இதில் ஒரு பெரும் தொகை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு லண்டனில் வைத்து செலுத்தப்பட்டது.லண்டனில் உள்ள போது ராகுல்காந்தி ரவுல் வின்சி என்ற பெயரில் வலம் வந்துள்ளார். மாதம் ஒரு முறையாவது லண்டனுக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்திக்கு இந்திய ஹைகமிஷனர் அலுவலகத்தைச் சார்ந்த ஒருவர் எடுபிடியாக செயல்பட்டு வருகிறார் என சுப்ரமணியன் சாமி விவரிக்கிறார்.


30 ரூபாயிக்கு வாங்கவேண்டிய‌ கொசு விரட்டியை 90 ரூபாயிக்கு வாடகை எடுத்துள்ளார்கள், 30 ஆயிரம் ரூபாயில் சொந்தமாகவே நல்ல கணினி வாங்கமுடியும் போது இவர்கள்  90 ஆயிரம் கொடுத்து கணினியை வாடகை எடுத்துள்ளார்கள், இதுமட்டுமல்லாமல் சாலை, மைதானம், கழிவறை  போண்ற எல்லா நிலையிலும் கொல்லையோ கொல்லை, ஆனால் அவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் அனுவிபத்து மசோதாவை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார்.

இன் நிலையில் டெல்லியில் பெய்துவரும் கடும் மழையால் பெரும்பாலான வேலைகள் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் தெறிவிக்கின்றன.     ஒலிம்பிக்கில் சீனா சாதித்ததுபோல், காமன்வெல்த் போட்டியில் இந்தியா சோபிக்குமா என்பது சோனியாவுக்குதான் வெளிச்சாம்.
Readmore...
Friday, September 3, 2010

நான் ஏன் குத்தாட்டத்தை ரசிக்கிறேன்? உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி பதில்.

0 comments
 
உடன்பிறப்பே! தந்தை பெரியாரால் ஈர்க்கப்பட்டு அறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டு, உடன்பிறப்புகளால் நான் அரசியலுக்கும் பதவிக்கும் வந்தவன் நான் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல‌. தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் நான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வருகிறேன் என்பதை உலகறியும். 650 கோடி ரூபாய் செலவில் நாம் நட்டத்திய செம்மொழி மாநாட்டை உலகம் மறந்துவிடுமா? இல்லை 100 நாட்களில் 4 தொலைக்காட்சி அலைவரிசைகளை கலைஞர் தொலைக்காட்சிக்காக துவங்கியதை மக்கள்சாதனை என்று சொல்லகூடாதா? இந்த வயதிலும் மிக கடுமையாக நான் உழைக்கிறேன் என்றால் அதை சில விஷ‌மிகளும், திராவிட பன்பாட்டு எதிரிகளும் தவறாக பேசுகிறார்கள்,பொய் பிர‌ச்சாரம் செய்கிறார்கள்.



ஷாருக் கான் போன்ற நடிகர்கள் மராட்டிய முதல் மந்திரியை பார்பதற்க்கு கூட அனுமதி மறுக்கப்படுகிற வேலையில் தமிழக முதல்வர் அலுவலக கதவு சின்னதிரை மற்றும் வெள்ளிதிரை கலைஞர்களுக்காக எப்போழுதுமே திறந்தே இருக்கிறது என்பதை கலையுலகம் நன்கறியும். எத்தனை சலுகைகள், எத்தனை எத்தனை பாராட்டு விழாக்கள்! இப்படி நடிகர்கள் மற்றும் நடிகைகள் புடைசூழ இருப்பதையே நான் பெருமையாக நினைக்கிறேன். சின்னதிரை கலைஞர்களுக்கு தனி நலவாரியம், சின்ன மற்றும் வெள்ளிதிரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றோர்களுக்கு 75 ஆயிரம் இலவச வீடு திட்டம் என இந்த அரசின் சாதனைப்பட்டியல் நீள்கிறது. இப்படி மக்களின் வரிபணத்தை வாரி வழங்குவதால் தான் அவர்கள் பாராட்டு விழா என்ற பெயரில் நல்ல குத்தாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், இதை ஏதோ நான் மட்டும்தான் கண்டுகளிப்பதுபோல சில பத்திரிக்கைகள் எழுதுகின்றன, அதே குத்தாட்டத்தை நமது கலைஞர் தொலக்காட்சியில் பல்வேறு வர்த்தக விளப்பரங்களுக்கிடையில் ஒளிபரப்பு செய்யவில்லையா, அல்லது அதை தமிழக மக்கள் தி.மு.க அரசு கொடுத்த இலவச டி.வியில் பார்க்கவில்லையா, ஏதோ இதுபோண்ற குத்தாட்டங்கள் பாராட்டுவிழாக்கள் என்ற பெயரில் நடத்துவதை ஒருசிலர் குறை கூறினாலும் அது மக்களுக்காவே என்பதை என்போண்ற திராவிட சிந்தனை உள்ளோர்கள் புரிந்துள்ளார்கள்.



ஏதோ இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் நான் மட்டும்தான் சின்ன திரைக்கும் வெள்ளிதிரைக்கும் அதிக நேரம் செலவிடுவதாக சிலர் நினைக்கிறார்கள்,அவர்கள் நினைத்திவிட்டு போகட்டும்,தமிழில் வெளிவரும் எல்லா திரைப்படத்தையும் நமது அமைச்சர் பெருமக்களோடு திரையரங்கிற்க்கே சென்று நான் பார்கிறேனே ஏன்? திராவிட இயக்கத்தை வளர்த்ததே கலையும் இலக்கியமும் தான் என்பதை அறிஞர் அண்ணா போண்றோர் எத்தனையோ மேடையில் பேசியிருக்கிறார்கள் என்பதை நீ நினைவில்கொள்ளவேண்டும்.


இன்று நேற்றல்ல கடந்த 60 ஆண்டுகளாக எனக்கு தமிழ் திரைஉலகோடு தொடர்புன்டு, என்னையும் இயக்கத்தையும் வளர்த்த தமிழ் திரைஉலகை சிறப்பாக வளர்க்க என்குடும்பத்தார்கள் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை நன்கறிவீர்கள், முரசொலி மாறனால் ஏற்படுத்தப்பட்ட சன் குழுமம் இன்று 22 தொலைக்காட்சி அலைவரிசையோடு தென் இந்தியா முழுவதும் கலைசேவை செய்துவருகிறது, மாறன் சகோதரர்களால் ஏற்பட்ட மனகசப்பால் உதயமான நமது கலைஞர் தொலைக்காட்சி தற்போது 5 அலைவரிசையோடு தமிழக மக்களுக்கு அல்லும் பகலுமாக‌ சேவை செய்துவருகிறது, அது மட்டுமா இன்று தமிழில் எடுக்ப்படும் பெரும்பான்மையான திரைப்படத்தை தயாரிப்பவர்களும், நடிப்பவர்களும் என் பேரன்களான உதயநிதியும், துறை தயாநிதியும் போண்றோர்கள்தான், இப்படி இந்த வெள்ளி மற்றும் சின்னதிரையை நாங்கள் ஆக்கிரமித்துள்ளதை கண்டு பொருக்கமுடியாத சிலர் அரசிற்க்கு எதிராக பேசுகிறார்கள், எமது நல்லாட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயல்கின்றன.


பேசுபவர் பேசட்டும் ஏசுபவர் ஏசட்டும், இந்த தள்ளாத வயதில் குத்தாட்டத்தை கண்டுகளிப்பதை நிருத்தமுடியாது, அதுவும் நமிதா போன்றோர் ஆடும் ஆட்டம் என் மனதையும் தொடும்படியாக அமைந்துள்ளது,கண்டுகளிப்பது குத்தாட்டமானாலும், கலைவளர்ப்பது நாமல்லவா! பலன் பெறுவது கலைஞர்கள் ஆனாலும் பயனடைவது தமிழக மக்கள் அல்லவா!! ஆகையால் உடன்பிறப்பே உன் தலைவனுக்கு பாராட்டு விழா என்றால் பற‌ந்துவா, நீ கழக‌ அரசு கொடுத்த இலவச டி.வியில் பார்ப்பதைவிட நேரில் பார்க்க வேண்டும் என்பதே என்விருப்பம். வாழ்க தமிழ்! வளர்க திராவிடம்!!



(கற்பனை ஆனாலும் உண்மை)
Readmore...

தனுஷ்கோடி: வலிநிறைந்த வறலாற்று சுவடுகள்:

1 comments
 
தனுஷ்கோடிக்கு போக நேர்ந்தது, 1964 புயலுக்கு பலியான அந்த கடற்கரை நகர் இன்றுவரை மறுகட்டமைப்பு செய்யப்படவில்லை, புயலுக்கு முன்பு சாலை, இரயில் பாதை என எல்லா வசதியும் நிறைந்த அந்த நகரை மறுகட்டமைப்பு செய்தால் விடுதலை புலிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியாது என உணர்ந்த இந்திய அரசும், தமிழ் இன அழிப்புக்கு துனை நிற்க்கும் தமிழக அரசும் நினைத்ததால் இன்றும் தனுஷ்கோடி 1964லேயே இருக்கிறது, கட்சதீவை இலங்கையிடம் தாரைவார்த்தவர்கள் எதிர் காலங்களில் மன்னார் வளைகுடா பகுதியை சீனாவிடம் இழந்தாலும் வியப்பேதுமில்லை.

என் கேம‌ராவில் ப‌திவான சில‌ தனுஷ்கோடி புகைப்ப‌ட‌ங்க‌ளை மிகுந்த வலியோடு உங்க‌ளுட‌ன் ப‌கிற்ந்துகொள்கிறேன்.






புகைப்படத்தை க்ளிக் செய்தால் பெரிய அளவில் தெறியும்.
Readmore...